அப்துல்லா உக்கும் நிலையம்
அப்துல்லா உக்கும் நிலையம் (ஆங்கிலம்: Abdullah Hukum Station மலாய்: Stesen Komuter Abdullah Hukum); சீனம்: 阿卜杜拉胡库姆站) என்பது மலேசியா, கோலாலம்பூர், மாநகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். உயர்த்தப்பட்ட நிலையில் உள்ள இந்த நிலையத்தில் 1998 செப்டம்பர் 1-ஆம் தேதி எல்ஆர்டி இலகு விரைவு தொடருந்து சேவை தொடக்கப்பட்டது. அதன் பின்னர் 2018 அக்டோபர் 28-ஆம் தேதி கொமுட்டர் தொடருந்து சேவை தொடக்கப்பட்டது.[1] பொதுமின்மயமாக்கப்பட்ட இந்த நிலையம் கோலாலம்பூர், பங்சார் சாலையில் அமைந்துள்ளது. அத்துடன் கிள்ளான் துறைமுக வழித்தடம் (Port Klang Line) கிளானா ஜெயா வழித்தடம் (Kelana Jaya Line) ஆகிய இரு வழித்தடங்களினால் இந்த நிலையம் சேவை செய்யப்படுகிறது. மத்திய வணிக பெருநகரமான கோலாலம்பூரின் தெற்கே பங்சார் சாலை மற்றும் கேஎல் சுற்றுச்சூழல் நகரம் KL Eco City ஆகியவற்றுகு இடையே இந்த நிலையம் அமைந்துள்ளது. கம்போங் அஜி அப்துல்லா உக்கும்அத்துடன் பங்சார் சாலை மற்றும் கிள்ளான் ஆற்றுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு கிராமமான கம்போங் அஜி அப்துல்லா உக்கும் (Kampung Haji Abdullah Hukum) என்ற கிராமத்தின் பெயரால் இந்த நிலையத்திற்கு பெயரிடப்பட்டது. இந்தக் கிராமம் இப்போது ஒரு சுற்றுச்சூழல் நகரமாக மாறியுள்ளது.[2] தெனாகா நேசனல்கேஎல் சுற்றுச்சூழல் நகரத்தைத் தவிர, அப்துல்லா உக்கும் நிலையத்திற்கு அருகிலுள்ள மற்றொரு முக்கிய அடையாளமானது தெனாகா நேசனல் நிறுவனத்தின் தலைமையகம் ஆகும். இந்த நிறுவனம் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் பங்சார் சாலையின் மேற்புறத்தில் அமைந்துள்ளது..[3] அமைப்பு
காட்சியகம்மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia