தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம்
தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Tanjung Malim Railway Station மலாய்: Stesen Keretapi Tanjung Malim); சீனம்: 丹绒马林火车站) என்பது மலேசியா, பேராக், முவாலிம் மாவட்டம், தஞ்சோங் மாலிம் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். தஞ்சோங் மாலிம், பேராங், களும்பாங் நகரங்களுக்கும் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்கும் இந்த நிலையம் சேவை செய்கிறது. 2007 மார்ச் மாதத்தில் தஞ்சோங் மாலிம் நகருக்கான புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. பொதுஇந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ்; மற்றும் கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் தஞ்சோங் மாலிம் நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது. தஞ்சோங் மாலிம் நிலையத்தின் ஒரு முனையில் சரக்கு முற்றம் உள்ளது. இது ரவாங்-ஈப்போ மின்மயமாக்கப்பட்ட இரட்டை வழித்தடத் திட்டத்திற்கு (Rawang-Ipoh Electrified Double Tracking Project) முன்னதாக உருவாக்கப்பட்டது. அமைவிடம்பேராக், முவாலிம் மாவட்டத்தில் தஞ்சோங் மாலிம் நகரின் மையப் பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலையின் தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை வழியாக அணுகலாம். இந்த நிலையத்திற்கு அருகில் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் உள்ளது. அத்துடன் புரோட்டோன் சிட்டி எனும் புரோட்டோன் கார் தயாரிப்பு தொழிற்சாலை நகரமும் தஞ்சோங் மாலிம் நகருக்கு அருகில் தான் உள்ளது. தொடருந்து சேவைகள்
பேராக் இரயில்வே சேவை1901-ஆம் ஆண்டில், பேராக் இரயில்வே எனும் பேராக் தொடருந்து சேவைக்கான (Perak Railway) தொடருந்து சேவை; சிலாங்கூர் தொடருந்து சேவையுடன் (Selangor Railways) ஒன்றிணைக்கப்பட்டு பின்னர் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (Federated Malay States Railways) என அறியப்பட்டது. பேராக் இரயில்வே எனும் பேராக் தொடருந்து சேவைக்கான தொடருந்து பாதைகள் முதன்முதலில் ஈப்போவில் தான் அமைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சிலிம் ரிவர் நகரிலும் அமைக்கப்பட்டன. பேராக் தொடருந்து சேவை 20 ஆண்டுகள் சேவை செய்தது.[1] ரவாங் - ஈப்போ இரட்டை வழித்தடம்ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையில் சிலிம் ரிவர் நிலையம் உள்ளது. ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையின் நீளம் 179 km (111 mi). இந்தப் பாதை முக்கியமான மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் அமைந்துள்ளது. கோலாலம்பூர் மற்றும் ஈப்போ நகரங்களுக்கு இடையே அதிகபட்ச 160 km/h (99 mph) வேகத்தில் தொடருந்துகளை இயக்குகிறது. இந்தத் திட்டம் 2008-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறைவடைந்தது. ரவாங் - ஈப்போ இரட்டை தொடருந்துப் பாதையில் மின்சார தொடருந்து சேவைகள் 2010-இல் தொடங்கப்பட்டன.[2] கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவைகேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே சேவையாற்றுகின்றன. கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது. ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது.[3] பழைய தஞ்சோங் மாலிம் நிலையம்மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia