ஒருங்கிணைந்த தெற்கு நுழைவாயில்
ஒருங்கிணைந்த தெற்கு நுழைவாயில் (மலாய்: Gerbang Selatan Bersepadu; ஆங்கிலம்: Southern Integrated Gateway (SIG); என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு, புக்கிட் சாகர் பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து வளாகத்தைக் குறிப்பிடுவதாகும். இந்த வளாகம் ஜொகூர் பாரு நகரின் ஜொகூர் பாரு சென்ட்ரல் தொடருந்து நிலையம்; மற்றும் சுல்தான் இசுகந்தர் சுங்கம், குடி நுழைவு மற்றும் தனிமைப் படுத்துதல் வளாகம்; சுல்தான் இசுகந்தர் கட்டிடம் ஆகியவற்றை உள்ளடக்கியது.[1] ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் அவர்களின் பெயரில் இந்த வளாகத்திற்குப் பெயரிடப்பட்டது. ஜொகூர் பாரு சென்ட்ரல் நிலையமும்; சுல்தான் இசுகந்தர் கட்டிட வளாகமும்; ஜொகூர் பாரு மற்றும் தெற்கு தீபகற்ப மலேசியாவின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குகின்றன.[2] பொதுஒருங்கிணைந்த தெற்கு நுழைவாயில் திட்டம் என்பது இசுகந்தர் மலேசியா மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்திற்கு மலேசிய பொதுப்பணித் துறை பொறுப்பேற்றது.[3] சுல்தான் இசுகந்தர் சுங்கம், குடி நுழைவு மற்றும் தனிமைப் படுத்துதல் வளாகம் (Customs Immigration Quarantine Complex) வளாகம் 16 டிசம்பர் 2008-ஆம் தேதி, வாகனங்களின் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. அக்டோபர் 2010-இல் ஜொகூர் பாரு சென்ட்ரல் தொடருந்து நிலையத்தின் செயல்பாட்டுச் சேவைகள் இணைக்கப்பட்டன. அத்துடன் பழைய ஜொகூர் பாரு தொடருந்து நிலையத்தின் சேவைகளும் நிறுத்தப்பட்டன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia