ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலை
ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 38 (ஆங்கிலம்: Malaysia Federal Route 38; அல்லது Johor Bahru Eastern Dispersal Link Expressway); மலாய்: Laluan Persekutuan Malaysia 38 அல்லது Lebuhraya Penyebaran Timur Johor Bahru) ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலை என்பது 8.1 கிலோமீட்டர் (5.0-மைல்) நீளம் கொண்ட அதிவேக நெடுஞ்சாலை என அறியப்படுகிறது. இந்தச் சாலை, மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடத்தின் இறுதிக் கட்டத்தில் பாண்டான் நகர மையத்தில் உள்ள மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்துடன் இணைகிறது. பொதுசிங்கப்பூருக்குள் எல்லை தாண்டிச் செல்லும் வாகனப் போக்குவரத்துகள், ஜொகூர் பாரு நகர மையத்தை எளிதாகக் கடந்து செல்லவும்; தெப்ராவ் நெடுஞ்சாலையில் (Johor Bahru–Kota Tinggi Highway) நெரிசலைக் குறைக்கவும் இந்த அதிவேக நெடுஞ்சாலை கட்டப்பட்டது.[2] இந்த அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானச் செலவு ரிங்கிட் RM 1 பில்லியன் ஆகும்.[3] ஒன்பதாவது மலேசியா திட்டம்இந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; மலேசியா-சிங்கப்பூர் எல்லையில் சுல்தான் இசுகந்தர் கட்டிடத்திற்கு முன்; ஜொகூர் பாரு சுங்கம், குடியேற்றம் மற்றும் தனிமைப் படுத்துதல் (Customs, Immigration and Quarantine (CIQ) Complex) வளாகத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. 2004-ஆம் ஆண்டில், ஒன்பதாவது மலேசியா திட்டத்தின் (Ninth Malaysia Plan) (2006-2010) கீழ், ஜொகூர் பாரு கிழக்குப் பரவல் இணைப்பின் (Johor Bahru Eastern Dispersal Link) கட்டுமானம் முன்மொழியப்பட்டது. ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலையின் கட்டுமானம் 1 அக்டோபர் 2007-இல் தொடங்கி; 20 மார்ச் 2012-இல் நிறைவடைந்தது. 1 ஏப்ரல் 2012 அன்று, நெடுஞ்சாலை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[4] விளக்கம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia