சாம்பா, சத்தீஸ்கர்
சாம்பா (Champa) என்பது இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்சுகீர்-சாம்பா மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். ஹஸ்தேவ் ஆற்றின் கரையில் அமைந்த சாம்பா நகரம், கடல் மட்டத்திலிருந்து 830 அடி (253 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் நெய்யப்படும் உயர்தர கோசா பட்டுத் துணிகள் புகழ்பெற்றவை. மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 21 வார்டுகளும், 9,843 வீடுகளும் கொண்ட நகரத்தின் மொத்த மக்கள்தொகை 45,256 ஆகும். அதில் 23,190 ஆண்கள் மற்றும் 22,066 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5747 (12.70%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 952 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.40% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 93.98%, முஸ்லீம்கள் 3.33% மற்றும் பிறர் 0.60% ஆகவுள்ளனர்.[1] கல்வி நிறுவ்னங்கள்
போக்குவரத்துசாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 1308, சம்பா நகரத்திற்கு 161 கி.மீ. தொலைவில் உள்ள மாநிலத் தலைநகரம் ராய்ப்பூர் நகரத்துடன் இணைக்கிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை எண் 4 தில்லி நகரத்துடன் சம்பாவை இணைக்கிறது. தொடருந்து நிலையம்டாடாநகர-பிலாஸ்பூர் மற்றும் ஹவுரா-நாக்பூர்-மும்பை இருப்புப் பாதை வழித்தடத்தில் சம்பா தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[2] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia