செந்தாரப்பட்டி
செந்தாரப்பட்டி (Sentharapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் கங்கவள்ளி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பச்சை மலை அடிவாரத்தில் அமைந்த ஒரு இயற்கை வளமுள்ள பகுதி. இப்பகுதியின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். அமைவிடம்இப்பேரூராட்சி, சேலத்திலிருந்து 70 கி.மீ.; கங்கவள்ளியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 35 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது.[4] இதன் மேற்கே தம்மம்பட்டி 4 கீ.மீ.; வடக்கே கங்கவள்ளி 20 கீ.மீ.; தெற்கே துறையூர் 40 கீ.மீ.தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்புசெந்தாரப்பட்டி - அஞ்சல் குறியீட்டு எண் 636110 ஆகும். இப்பேரூராட்சி கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் கள்ளக்குறிச்சி (மக்களவைத் தொகுதி) க்குட்பட்டதாகும். மக்கள் தொகை பரப்பில்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி 3,894 குடும்பங்களும், 43 தெருக்களையும், 14,308 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 71.30% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1025 பெண்கள் வீதம் உள்ளனர்.[5] போக்குவரத்துசெந்தாரப்பட்டி - ஆத்தூர், சேலம், தம்மம்பட்டி, கங்கவல்லி, திருச்சி, நாமக்கல், சின்னசேலம், விழுப்புரம், மதுரை, இராசிபுரம், ஈரோடு, திருச்செங்கோடு, வாழப்பாடி, கோவை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், உப்பிலியாபுரம், துறையூர், சமயபுரம், சென்னை, திருவண்ணாமலை, பெங்களூரு, பச்சைமலை மற்றும் கொல்லிமலை போன்ற நகரங்களுக்கு சாலை வழியாக பேருந்து போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, உள்கிராமங்களை இணைப்பதில் மினிபஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் அருகிலுள்ள ரயில் நிலையம் 32 கி.மீ தொலைவில் உள்ள ஆத்தூரில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் அருகிலுள்ள விமான நிலையம் சேலம் விமான நிலையம், 70 கி.மீ தொலைவில் உள்நாட்டு சேவைகளை வழங்குகிறது. இரண்டாவது அருகிலுள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் ஆகும், இது நகரத்திலிருந்து சுமார் 98 கி.மீ தொலைவில் உள்ளது. செந்தாரப்பட்டியில் உள்ள பகுதிகளின் பட்டியல்
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia