சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில்
டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் (ஆங்கிலம்; மலாய்: Saifuddin Nasution bin Ismail; சீனம்: 赛夫丁纳苏迪安) (பிறப்பு: 7 திசம்பர் 1963) என்பவர் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் 2022 திசம்பர் மாதம் 3-ஆம் தேதி மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர் (Minister of Home Affairs Malaysia) பதவியில் நியமிக்கப்பட்டவர். 2022 திசம்பர் மாதத்தில் அன்வார் இப்ராகிம் அமைச்சரவை அமைக்கப்பட்ட போது இவர் மலேசிய மக்களவையில் செனட்டராக நியமிக்கப்பட்டார். பொதுஇவர் மலேசிய நாடாளுமன்றம்; மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் ஆகியவற்றில் வகித்த உறுப்பினர் பதவிகள்: மலேசிய நாடாளுமன்றம்
கெடா மாநில சட்டமன்றம்
பினாங்கு மாநில சட்டமன்றம்
அரசியல்இவர் பாக்காத்தான் அரப்பான் (Pakatan Harapan) (PH) கூட்டணியின் ஓர் அங்கமான மக்கள் நீதிக் கட்சியின் (People's Justice Party Malaysia) (PKR) உறுப்பினர் ஆவார். அவர் சனவரி 2010 முதல் அக்டோபர் 2014-இல் பதவி துறப்பு செய்யும் வரை மக்கள் நீதிக் கட்சியின் பொதுச் செயலாளராகவும்; மீண்டும் நவம்பர் 2016 முதல் மார்ச் 2020 முதல் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[6] அரசியல் வரலாறுசைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் தொடக்கத்தில் ஆளும் அம்னோ கட்சியின் இளைஞர் பிரிவில் உறுப்பினராக இருந்தார். ஆனாலும் 1999-இல் அதன் உதவிச் செயலாளர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அன்வர் இப்ராகீம் நண்பரான சைபுதீன் பின்னர் கெஅடிலான் (KeADILan) கட்சிக்கு மாறினார். இந்தக் கட்சி பின்னர் காலத்தில் மக்கள் நீதிக் கட்சியின் (People's Justice Party Malaysia) (PKR) என மாற்றம் கண்டது.[7][8] விருதுகள்மலேசிய விருதுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia