ஜூடோ கே. கே. இரத்தினம்
ஜூடோ கே. கே. இரத்தினம் (பிறப்பு கே. கே. இரத்தினம் ; 8 ஆகத்து 1930 - 26 சனவரி 2023) என்பவர் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றிய ஓர் இந்திய சண்டை பயிற்சியாளர் மற்றும் சண்டைக் காட்சி அமைப்பாளர் ஆவார். இவர் 1959 ஆம் ஆண்டு தாமரைக்குளம் படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் 1966 ஆம் ஆண்டு வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் சண்டைப் பயிற்சியாளராக அறிமுகமானார். திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு நடிகராக 2006 இல் தலைநகரம் படத்தில் கடைசியாக தோன்றினார். விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன், தளபதி தினேஷ், ஜாகுவார் தங்கம், ராம்போ ராஜ்குமார், பெப்சி விஜயன், பொன்னம்பலம், ஜூடோ கே. கே. இராமு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், ஆம்பூர். ஆர். எஸ். பாபு, எம். சாகுல் அமீது ஆகிய திரைப்பட சண்டை பயிற்சியாளர்கள், நடிகர்கள் இவரிடம் சண்டைக் காட்சிக் கலைஞர்களாகவும், உதவியாளர்களாகவும் பணியாற்றியவர்களாவர். இவரது மகன் ஜூடோ. கே. கே. இராமு ஒரு சண்டைப் பயிற்சியாளராகவும், இவருடைய பேரன்கள் ஜூடோ லெனின் மற்றும் ஜான் பிரின்ஸ் சண்டைக் காட்சி கலைஞர்களாகவும் உள்ளனர்.[1] இரத்தினம் 2023 சனவரி 26 அன்று 92 தன் வயதில் குடியாத்தத்தில் இறந்தார்.[2][3] திரைப்படவியல்
நடிகராக
தயாரிப்பாளராக
விருதுகளும் கௌரவங்களும்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia