தண்ணீர்ப்பந்தல் (கோயம்புத்தூர்)

தண்ணீர்ப்பந்தல் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இவ்வூர், கோவை மாவட்டத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் இவ்வூர் ஆலாந்துறை முதன்மைச் சாலையில் உள்ளது.

பெயர்க்காரணம்

பண்டு வெள்ளிமலை (வெள்ளியங்கிரி) சமணர் படுகைக்கும் சிவன் கோவிலுக்கும் பயணம் மேற்கொள்வோர்க்கு தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டது. இக்காரணம் பற்றியே இவ்வூர் இப்பெயர் பெற்றது.

கல்வி, மொழி மற்றும் கலாச்சாரம்

தமிழ் மொழியே பெரும்பாலும் முதன்மை மற்றும் நாளாந்த மொழியாக உள்ளது. இளைய தலைமுறையினர், ஆங்கிலம் அறிந்தவர்களாக உள்ளனர். கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு

வேளாண்மை முதன்மை தொழில். மேலும் வேளாண் சார்த்த தொழில்கள், ஆலாந்துறை முதன்மை சாலையில் அமைந்துள்ளதால் தேநீர் விடுதி, அடுமனை முதலானவையும் இங்கு நடைபெறுகின்றன.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya