திருமலையம்பாளையம்

திருமலையம்பாளையம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மதுக்கரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,164 (2011)

397/km2 (1,028/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 30.65 சதுர கிலோமீட்டர்கள் (11.83 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/thirumalayampalayam

திருமலையம்பாளையம் (ஆங்கிலம்:Thirumalayampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இப்பேரூராட்சியின் எல்லை கேரள மாநிலத்தினை ஒட்டியுள்ள பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத் தொழிலையே மேற்கொள்கின்றனர்.

அமைவிடம்

இது கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் கோயம்புத்தூரிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 6 கி.மீ. தொலைவில் உள்ள மதுக்கரையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

30.65 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,375 வீடுகளும், 12,164 மக்கள்தொகையும் கொண்டது.[4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. திருமலையம்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Thirumalayampalayam Town Panchayat Population Census 2011


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya