படேதலாவ் ஏரி
படேதலாவ் ஏரி அல்லது பெரிய ஏரி என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், கிருட்டிணகிரி அருகே காட்டிநாயனப் பள்ளி ஊராட்சியில் ஒரு ஏரி ஆகும். இந்த ஏரி 269 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1] மார்க்கண்ட நதியின் குறுக்கே வேப்பனப்பள்ளி அருகே குப்பச்சிப்பாறை என்ற இடத்தில் தடுப்பணை காட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து மாரசந்திரம் வழியாக இருந்து படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் வரும். இந்த ஏரியில் இருந்து செல்லும் உபரி நீரானது பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் வகையில் வாய்கால் அமைக்கப்பட்டள்ளது. இந்த கால்வாயின் கரையோரத்தில் உள்ள ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. [2] ஆனால் போதிய மழை இன்மையால் பல ஆண்டுகள் ஏரிக்கு நீர் வராமல் வறண்ட நிலையில் இருக்கும் நிலை உள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து படேதலாவ் ஏரிக்கு கால்வாய் அமைத்து, வெள்ளப்பெருக்கு காலத்தில் வரும் உபரிநீரை திருப்பி விட்டு ஏரியை நிரப்பிட வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் இருந்து வருகின்றது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia