மாநிலத்தின் நடு பகுதியில் அமைந்துள்ள திருச்சிக்கு, இப்பேருந்து நிலையம் ஒரு முக்கியமான போக்குவரத்து புள்ளியாக உள்ளது. இது 4.5 ஏக்கர்களில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கிருந்து தினந்தோறும் 2,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.[3][4]
சேவைகள்
மத்திய பேருந்து நிலையத்தின் உட்பகுதி
வடக்கு மற்றும் மேற்கே செல்லும் உள்ளூர் பேருந்துகள் மற்றும் வெளியூர் பேருந்துகள் குறிப்பிட்ட கால இடைவேளையில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், கர்நாடக, கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.