மலேசிய பகாங் பல்கலைக்கழகம்
மலேசிய பகாங் பல்கலைக்கழகம் (ஆங்கிலம்:(University Pahang Malaysia; மலாய்: Universiti Pahang Malaysia) (UMPSA) என்பது மலேசியா, பகாங், பெக்கான் நகரில் உள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம்; மற்றும் பல்துறை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். தொடக்கத்தில் இந்தப் பல்கலைக்கழகம் மலேசிய பல்கலைக்கழகப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (ஆங்கிலம்:(University College of Engineering and Technology Malaysia; மலாய்: Kolej Universiti Kejuruteraan dan Teknologi Malaysia)) (UTEC / KUKTEM) எனும் பெயரில் நிறுவப்பட்டது.[2] பின்னர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகத் தகுதி உயர்த்தப்பட்டது. 28 நவம்பர் 2015 அன்று, இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது. வரலாறு2002-ஆம் ஆண்டில், மலேசிய பல்கலைக்கழகப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பகாங் வளாகம் எனும் பெயரில் மலேசிய பகாங் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு, குவாந்தான் பண்டார் இந்திரா மக்கோத்தா நகரில் ஒரு சிறிய வளாகத்தில் இருந்து இயங்கி வந்தது.[3][4] மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் சிந்தனையின் விளைவாக இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. நஜீப் ரசாக் அப்போது மலேசிய கல்வி அமைச்சராகப் பதவியில் இருந்தார். இந்தப் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம் பெக்கான் நகரில் உள்ளது. 27 சூலை 2009-இல் அதன் செயல்பாட்டைத் தொடங்கியது. முதன்மை வளாகத்தில் 10,000 மாணவர்கள் மற்றும் 2,000 கல்விப் பணியாளர்கள் வரை தங்குவதற்கான வசதிகள் உள்ளன. துறைகள்
இணைப் பல்கலைக்கழ்கங்கள்
காட்சியகம்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia