முளா-முதா ஆறு
முளா-முதா ஆறு (Mula-Mutha River) இந்தியாவின் மகராட்டிரா மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். இது புனே நகரில் முளா மற்றும் முதா ஆறுகளின் சங்கமத்தால் உருவாகிறது. பின்னர் பீமா ஆற்றினைச் சந்திக்கிறது. இதன் பின்னர் கிருஷ்ணா ஆற்றினைச் சந்தித்து இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.[1] சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள காவடி கிராமத்தின் வழியாகப் பாய்ந்து செல்லும் இந்த ஆறு, பல வலசைப்போகும் பறவைகளுக்குப் புகலிடமாக உள்ளது. சமீப காலமாக மாசுபாடு அதிகரிப்பதன் விளைவாகப் பறவைகளின் வலசைப்போகும் பறவைகளின் வரத்துக் குறைந்துள்ளது.[2] புனே நகராட்சிப் பகுதியில் ஆற்றில் கலக்கும் கழிவுகளால் ஏற்படும் மாசுபாடு பீமா ஆறு, உஜானி அணை மற்றும் கிருஷ்ணா ஆறு ஆகியவற்றின் நீர்த்தேக்கங்களில் அதிக அளவு மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக நீர்வழி நோய்கள் பல ஏற்படுகின்றன.[3] புனே மாநகராட்சி பகுதியிலிருந்து 125 எம். எல். டி. சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீரைக் கலப்பது உட்பட அதிக அளவு மாசுபாடு காரணமாக, மகாராட்டிர மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆற்று நீரின் தரத்தை வகுப்பு-4 என வகைப்படுத்தியுள்ளது.[4] புனே மாநகராட்சி, மித்தி ஆற்றில் மும்பையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு முயற்சியினை ஆக்சிஜனை செலுத்தி இந்த ஆற்றினையும் சுத்தப்படுத்தி மீட்டெடுக்கும் திட்டங்களை அறிவித்தது.[5] 2011ஆம் ஆண்டில், புனே மாநகராட்சிஆதரவுடன் மகராட்டா வர்த்தகம், தொழில்கள் மற்றும் விவசாயம் அமைப்பின் முன்னெடுப்பினை அடுத்துப் பல ஜப்பானியத் தொழிலதிபர்கள் முளா-முதா ஆற்றினைச் சுத்தம் செய்து அழகுபடுத்துவதற்கு ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர். 2011ஆம் ஆண்டு, புனே மாநகராட்சி முளா- முதாவின் கரையில் ஷிவானே முதல் காரடி வரை 22 கிலோமீட்டர்கள் (14 mi) ) தூரத்திற்கு ஆற்றங்கரை சாலை அமைக்க ஒப்புதல் அளித்தது. நகரின் பல முக்கிய சாலைகளை இணைக்கத் திட்டமிடப்பட்டது. 2014ஆம் ஆண்டு புனே காவல் துறையினர் காரடி அருகே உள்ள ஆற்றங்கரையில் மரிஜுவானா செடிகள் வளர்க்கப்பட்டதைக் கண்டுபிடித்து அழித்தனர்.[6] மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia