இந்தியாவின் புதிய வங்கிஇந்தியாவின் புதிய வங்கி (New Bank of India) 1936இல் லாகூரில் நிறுவப்பட்ட வணிக வங்கியாகும். இவ்வங்கி, தனது தலைமையகத்தை 1947இல் அமிர்தசரஸ்க்கும், 1956இல் புது தில்லிக்கும் மாற்றிக் கொண்டது. இவ்வங்கி, 1965இல் தித்வானா தொழில்துறை வங்கியையும், 1969இல் சாவ்லா வங்கியையும், 1971இல் சகுகாரா வங்கியையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவ்வங்கியானது பஞ்சாப் மற்றும் காஷ்மீர் வங்கியையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இணைத்துக் கொண்ட வங்கிகள்
இணைப்புஇந்திய அரசு 1980இல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது இவ்வங்கியும் தேசியமயமாக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டில் இவ்வங்கியை பஞ்சாப் தேசிய வங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது. [1][2] ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி, மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியை தன்னுடன் இணைத்துக் கொண்டது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பாக இதுபோன்றதொரு இணைப்பானது இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறவில்லை.[3] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia