பீகார் வடக்கு கிராம வங்கி
பீகார் வடக்கு கிராம வங்கி (Uttar Bihar Gramin Bank, உத்தர் பீகார் கிராமின் வங்கி) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு மண்டல ஊரக வங்கி ஆகும்.[1] இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்துக்குச் |சொந்தமான வங்கி. கிளை வலையமைப்பு, பணியாளர்கள் எண்ணிக்கை மற்றும் செயல்பாட்டுப் பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய மண்டல ஊரக வங்கிகளில் இதுவும் ஒன்றாகும்.[2][3] மண்டல ஊரக வங்கிச் சட்டம், 1976 (21-ன் 1976) 23 ஏ பிரிவின் துணைப் பிரிவு (1)-ன் கீழ் இந்திய நிதி அமைச்சகம் அரசிதழில் 1976ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிவிப்பின்படி, உத்தர பீகார் க்ஷேத்ரிய கிராமின் வங்கி மற்றும் கோசி க்ஷேத்ரிய கிராமின் வங்கி (பிராந்திய கிராமப்புற வங்கிகளை மாற்றுதல்) ஆகியவற்றை இணைத்து இந்த வங்கியை இந்திய அரசு உருவாக்கியது.[4] இது பீகார் மாநிலத்தில் உள்ள இந்திய மத்திய வங்கியால், இப்பகுதியின் ஒரே மண்டல ஊரக வங்கி என்ற வகையில் நிதிநல்கை செய்யப்படுகிறது.[1][5] உத்தர பீகார் கிராமின் வங்கியின் தலைமையகம் முசாபர்பூரில் செயல்படுகிறது.[6][7] 2023 ஆகத்து திங்களின்படி பீகார் வடக்கு கிராம வங்கியின் தலைவர் சோஹைல் அகமது ஆவார்.[1] வட்டார அலுவலகம்பீகார் வடக்கு கிராம வங்கி 14 வட்டார அலுவலகங்களைக் கொண்டுள்ளது.[8]
செயல்படும் பகுதிகள்பீகார் வடக்கு கிராம வங்கி பீகார் மாநிலத்தில் 18 மாவட்டங்களில் 1032 கிளைகளின் ஒருங்கிணைப்பு மூலம் செயல்படுகிறது.[9][10]
உத்தர பீகார் கிராமின் வங்கியின் இந்திய நிதிசார் முறைமைக் குறியீடு (IFSC):CBIN0R10001 [11] விருதுவேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கி ஏற்பாடு செய்த மாநில கடன் கருத்தரங்கில், மண்டல ஊரகப் பிரிவில் சுய உதவிக் குழுக்களை வங்கியுடன் இணைத்த வகையில் சிறந்த செயல்பாட்டிற்காக வங்கிக்கு விருது வழங்கப்பட்டது.[12] ஆட்சேர்ப்புஒவ்வொரு ஆண்டும் வங்கி பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பொது எழுத்துத் தேர்வு மூலம் வங்கி அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.[13] மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia