காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில்
காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் (ஐராவதேசம்) என்றழைக்கப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், பல்லவர்கள் கட்டிய கோவிலாக கருதப்படும் இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1] இறைவர், வழிபட்டோர்
தல வரலாறுஇத்தல இவ்விறைவனை ஐராவதம் வழிபட்டு, இந்திரனைத் தாங்குகின்ற வரம் பெற்றது, தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில் அக்கடலில் தோன்றிய வெள்ளை யானையாகிய ஐராவதம் இந்திரனைத் தாங்குதற்குப் பூஜித்த தலமாக இத்தல வரலாற்றில் சொல்லப்படுகிறது.[2] தல விளக்கம்ஐராவதேசம் எனும் இது, நான்கு தந்தங்களையுடைய ஐராவதம் என்னும் வெள்ளையானை, சிவலிங்கம் நிறுவி ஐராவதேசர் என்னும் அப்பெருமானைப் பூசனை புரிந்து யானைகட்குத் தலைமையாகவும், இந்திரன் ஊர்தியாம் நிலைமையையும் பெற்றது. இத்தலம் இராஜவீதியும் நெல்லுக்காரத் தெருவும் கூடுமிடத்தில் மேற்கு நோக்கிய திருமுன்பொடும் விளங்குகின்றது.[3] தல பதிகம்
அமைவிடம்தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் மேலாண்டை இராசவீதி எனப்படும் மேற்கு ராஜவீதியின் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு வடகிழக்கு தெங்கோடியில் சாலைக்கு கீழ்பால் இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், மேற்கு பார்த்த சன்னதியாக இக்கோவில் அமைந்துள்ளது.[5] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia