காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில்
காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் (கற்கீசம் இலட்சுமீசம்) என அறியப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இவ்விறைவரை கல்கீசர் எனும் மற்றொரு பெயருடனும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1] இறைவர், வழிபட்டோர்
தல வரலாறுகொடியவர்களை அழிப்பதற்காக யுகாந்திர காலத்தில் திருமால் கற்கியாகத் தோன்றி, காஞ்சிக்கு வந்து சிவலிங்கப் பிரதிட்டை செய்து வழிபட்டு எண்ணற்ற வரங்களைப் பெற்றார் என்பது வரலாறு.[2] தல விளக்கம்கற்கீசம் எனும் இது, ஊழி முடிவில் கொடியவர்களை அழித்தற் பொருட்டுத் திருமால் கற்கி (குதிரை) ஆக இருந்து வீரராக வேசத்திற்குத் தெற்கில் மண்ணி தீர்த்தக் கரையில் வணங்கி வரம்பெற்ற தலம் ஆகும். வீரராகவேசத்திற்கும் ஐயனார் கோயிலுக்கும் அடுத்துள்ள இச்சிவலிங்கத்தை வணங்கினோர் போக மோட்சங்களை பெறுவார்.[3] தல பதிகம்
அமைவிடம்தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணராயர் தெருவில் சென்று வயல்வெளியில் இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், கச்சபேசுவரர் கோயிலின் மேற்கு திசையில் இக்கோவில் அமைந்துள்ளது.[5] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia