காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில்
காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் (சௌனகேசம்) என்றழைக்கப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இவ்விறைவரை திருக்காஞ்சீஸ்வரர் எனும் மற்றொரு பெயருடனும் வழங்கப்படுகிறது. இது, புத்தேரித் தெருவை அடுத்துள்ள கவுனசேகர் தெருவில் உள்ளது. கிழக்கு பார்த்த சன்னதியாக அறியப்பட்ட இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1] இறைவர், வழிபட்டோர்
தல வரலாறுகவுனக முனிவர் தம்பெயரால் சிவலிங்கம் நிறுவி போற்றி மலநோய் நீங்க் முக்தி எய்தினர். சகோதர தீர்த்தம் அக்னிதேவன் தான் ஒளித்திருப்பதற்கு இக்குளத்தருகே வருணணை தன்னையொருவருக்கும் காட்டக்கூடாதென்றும் எனக்கு நீ சகோதரனல்லவா என்றும் பிரார்த்தித்து ஒளிந்திருந்தனராதலால் அக்குளம் சகோதர தீர்த்தமெனப் பெயர் பெற்றதென்பது வரலாறாகும்.[2] தல விளக்கம்சவுனகேசம் எனும் இது, சவுனக முனிவர் தம்பெயராற் சிவலிங்கம் நிறுவிப் போற்றி மலநோய் நீங்கி முத்தி எய்தினர். இக்கோயில் புத்தேரி தெருவை அடுத்துள்ள சவுனகேசர் தெருவில் உள்ளது.[3] தல பதிகம்
அமைவிடம்தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் புத்தேரித் தெருவை அடுத்துள்ள கவுனசேகர் தெருவில் உள்ள தானப்ப நாயகன் தெருவில் இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், கச்சபேசுவரர் கோயிலின் மேற்கு திசையில் கிழக்கு பார்த்த சன்னதியாக இக்கோவில் அமைந்துள்ளது.[5] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia