1947இல் இந்தியா விடுதலை அடைந்தபின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானம் கொச்சின் அரசும் இணைக்கப்பட்டு திருவிதாங்கூர்-கொச்சின் என பெயர்சூட்டப்படடது. சனவரி 26, 1950 ஆம் ஆண்டு, இந்தியா குடியரசான போது இதற்கு மாநிலமாக சட்ட ஏற்பு கொடுக்கப்பட்டது.
இந்திய அரசு நவம்பர் 1, 1956ல் நடைமுறைப்படுத்திய மாநில சீரமைப்புச் சட்டம், 1956ன் படி மலபார் மாவட்டம், திருவிதாங்கூர்-கொச்சின் (தமிழ்நாட்டுடன் நாகர்கோவில் மாவட்டமாக இணைந்த நான்கு வட்டங்களைத் தவிர), தென் கனரா மாவட்டத்தின் காசர்கோடு வட்டம், ஆகியவை இணைந்து கேரள மாநிலம் உருவானது. 1957ல் புது மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன.[3][3] — world's first democratically-elected[4] — headed by E.M.S. Namboodiripad.