பழவந்தாங்கல் தொடருந்து நிலையம்
பழவந்தாங்கல் தொடருந்து நிலையம் (Pazhavanthangal railway station, நிலையக் குறியீடு:PZA) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையமானது நங்கநல்லூர், பழவந்தாங்கல், இந்து காலனி, மடிப்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதி மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 12மீ உயரத்தில் உள்ளது. வரலாறுஇந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் தொடருந்து சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1] சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia