ஆவூர் (கும்பகோணம்)

 ஆவூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருவாரூர்
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

திருநல்லூர் சப்தஸ்தானங்களுள் ஒன்று ஆவூர் ஆகும். பிற தலங்கள் - திருநல்லூர், கோவிந்தக்குடி, மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), திருப்பாலைத்துறை ஆகியவையாகும். [1]

அமைவிடம்

ஆவூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில்இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் பட்டீஸ்வரம் வந்து, கோவிந்தக்குடி அடுத்து இந்த ஊர் அமைந்துள்ளது. கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் வலங்கைமான் வந்து, கோவிந்தக்குடி வழியாக இத்தலத்திற்குச் செல்லலாம். பிரமன் அறிவுரைப்படி காமதேனு வழிபட்டதால் ஆவூர் எனப்படுகிறது.

இறைவன், இறைவி

இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் பசுபதீஸ்வரர், இறைவி மங்களநாயகி.

பாடியோர்

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனைப் பற்றி திருஆவூர்ப்பசுபதீச்சரம் பதிகத்தில் பின்வருமாறு போற்றுகிறார்.
"விண்ணுயர் மாளிகை மாடவீதி
விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடல றாதவாவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே"

போக்குவரத்து

தொழில் : விவசாயி

நில, நீர் மற்றும் vatrilai

சான்றுகள்

  1. ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002

வெளி இணைப்புகள்

http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_avurp_pacupaticcaram.htm பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya