தேவிபிரசாத் திவிவேதி
தேவிபிரசாத் துவிவேதி, இந்திய எழுத்தாளரும், சமசுகிருத இலக்கியவாதியும் ஆவார்.[1] 2011ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதினை வழங்கி சிறப்பித்தது.[2] வாழ்க்கைக்குறிப்புஇவர் 1956ஆம் ஆண்டில் அக்டோபர் இருபதாம் நாளில், வாரணாசியில் பிறந்தார்.[3] சமூகவியலுக்கான முதுநிலைப் பட்டத்தை வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் பெற்றார். பின்னர், சம்பூர்ணானந்து சமசுகிருத பல்கலைக்கழகத்தில் சாகித்யாச்சாரியா, ஆச்சாரியா ஆகிய பட்டங்களை பெற்றார். இந்த பல்கலையில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3] பின்னர், இதே பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேராசிரியராக சேர்ந்தார்.[4] பவுத தர்சன் மீமான்சா, சித்ர சம்பு காவ்யச சசமிக்சம் சம்பதனம், சமசுகிருத துவனி விஞ்ஞான், காவ்ய சாஸ்திரீய பரிபாஷிக் சப்தோன் கி நிருக்தி[5] உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார். இவர் ஆச்சாரிய ரத்னா, வேத பண்டிதர் விருது, சத்ரபதி சிவாஜி சம்மான், காசி கவுரவ அலங்காரன், பத்மசிறீ, பத்மபூசண் உள்ளிட்ட விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார்.[3][6] மேலும் பார்க்கசான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia