இலாகௌல் மற்றும் ஸ்பீதி மாவட்டம்
லாஹௌல் மற்றும் ஸ்பீதி இமாசலப் பிரதேசம், இந்தியாவில் உள்ள மாவட்டம். முன்பு லாஹௌல் மற்றும் ஸ்பீதி ஆகியவை தனித்தனி மாவட்டங்களாக இருந்தன. பின்னர் இவ்விரண்டு மாவட்டங்களும் ஒன்றிணைக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தற்போதைய தலைமையகம் கேலாங். இம்மாவட்டம் ஒன்றிணைக்கப்படுவதற்கு முன்னர் லாஹௌல் மாவட்ட தலைநகராக கர்டாங் நகரும், ஸ்பீதி மாவட்ட தலைநகராக தான்கர் நகரும் இருந்தது. இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் இம்மாவட்டம் மூன்றாவது மிக குறைந்த மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும்.[1] மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி லாஹௌல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 31,528.[1] இது தோராயமாக சான் மரீனோ நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன்மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 638வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 2 inhabitants per square kilometre (5.2/sq mi) .[1] மேலும் லாஹௌல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் -5.1 %.[1] லாஹௌல் மற்றும் ஸ்பீதி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 916 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் லாஹௌல் மற்றும் ஸ்பீதி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 77.24 %.[1]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia