இல. கணேசன்
இல. கணேசன் (iLa. Ganeshan, பிறப்பு: 16 பிப்ரவரி 1945) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாகாலாந்து மாநிலத்தின் தற்போதைய ஆளுநரும் ஆவார்.[2][3] இந்தியாவின் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் மற்றும் கட்சியின் தேசியக் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.[4] பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் பிரச்சாரகராக இருந்தவர்.[5] பின் கட்சியின் தேசிய செயலராகவும், கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் பணியாற்றியவர்.[6] பின்னர் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடக்க கால வாழ்க்கை1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் இலக்குமிராகவன் - அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும் தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேரச் செயல்பாட்டாளராகப் பொதுவாழ்விற்கு வந்தார்.[7] இவர் தெலுங்கு பிராமண வகுப்பை சேர்த்தவர்.[8][9] அரசியல் வாழ்க்கைஇவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவர். 1991 இல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.[10] ஆகஸ்டு 22, 2021 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களால் 17வது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 20, 2023 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திரு. திரௌபதி முர்மு அவர்களால் 19வது நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia