கரோல் கிரெய்டர்
கரோல் கிரெய்டர் (Carol Greider, பிறப்பு: ஏப்ரல் 15, 1961) என்பவர் ஒரு மூலக்கூற்று உயிரியலாளர்[1]. இவர் 1984 ஆம் ஆண்டில் எலிசபெத் பிளாக்பர்ன் என்பவருடன் இணைந்து நடத்திய டெலொமெரேஸ் என்ற நொதியத்தைக் கண்டுபிடித்தார். இவரே நிறப்புரிகளின் முனைகளில் இருக்கும் முனைக்கூறுகளின் அமைப்புக் குறித்து முதன் முதலாக ஆராய்ந்தவர். நிறப்புரிகள் எவ்வாறு காக்கப்படுகின்றன குறித்த ஆய்வுக்காக பிளாக்பர்ன், மற்றும் ஜாக் சோஸ்டாக் ஆகியோருடன் இவருக்கு 2009 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2]. வாழ்க்கைக் குறிப்புகலிபோர்னியாவின் சான் டியேகோவில் பிறந்தவர் கிரெய்டர்[3]. அவரது குடும்பம் சான் டியேகோவில் இருந்து டேவிஸ் என்ற இடத்துக்கு இடம்பெயர்ந்தது. சாண்டா பார்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1983 இல் உயிரியலில் பட்டப் படிப்பை முடித்தார். 1987 இல் மூலக்கூற்று உயிரியலில் பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிளாக்பேர்னின் கீழ் முனைவர் பட்டத்தையும் முடித்தார். பெர்க்லியில் பணியாற்றும் போது டெலொமெரேசு என்ற நொதியத்தை பிளாக்பெர்ன் உடன் இணைந்து கண்டுபிடித்தார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia