ஹர் கோவிந்த் கொரானா
அர்கோபிந்த் குரானா, அல்லது ஹர் கோவிந்த் குரானா (Har Gobind Khorana, Hindi: हरगोविंद खुराना, சனவரி 9, 1922 - நவம்பர் 9, 2011[1]) ஓர் இந்திய அமெரிக்க மூலக்கூற்று உயிரியல் அறிவியலாளர் ஆவார். மரபுக்குறியீடு (genetic code) பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் மரபு குறியீட்டின் பங்கு குறித்த ஆராய்விற்காக 1968ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினை மார்சல் நோரென்பர்க், இராபர்ட் ஹாலி ஆகியோருடன் பகிர்ந்து பெற்றவர்[2]. 1966ஆம் ஆண்டு அமெரிக்காவின் இயல்பான குடிமகனான இவருக்கு தேசிய அறிவியல் பதக்கம் கொடுக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்சில் கான்கார்ட் நகரில் இவர் வசித்து வந்தார். இளமைதற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ராய்பூர் கிராமத்தில் 1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருடைய தந்தையார் கிராமத்தில் வரி வசூலிப்பவராக பணியாற்றி வந்தார். இவருடைய குடும்பம் வறுமையில் வாடிய போதும், பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் தந்தை மிகுந்த ஆர்வம் காட்டினார். சுமார் 100 குடும்பங்கள் கொண்ட அவரது கிராமத்தில் குரானாவின் குடும்பம் மட்டுமே எழுத்தறிவு பெற்று விளங்கியது. குரானாவின் தொடக்கக் கல்வி கிராமப் பள்ளியில் மரத்தடியின் கீழ்தான் துவங்கியது. இளவயது முதலே அவர் படிப்பில் சிறந்து விளங்கினார். தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள மூல்டான் என்ற ஊரில் அமைந்திருந்த டி.ஏ.வி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 'இரத்தன்லால்' என்ற ஆசிரியர் இவரைக் கவர்ந்தவராக விளங்கினார். பள்ளிப் படிப்பைச் சிறப்பாகப் பயின்று முடித்த இவர் லாகூரில் அமைந்திருந்த பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். பி.எஸ்சி பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். இங்கு பேராசிரியரும் சிறந்த ஆய்வாளருமான 'மதன்சிங்' என்பவரின் மேற்பார்வையில் 1945ஆம் ஆண்டு வேதியியலில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். பணிகள்1949 இறுதியில் இந்தியா இந்தியா திரும்பினார். இந்தியாவில் பல மாதங்கள் வேலையின்றி வாடிய குரானா மேற்கொண்டு ஆய்வு செய்யும் எண்ணத்தோடு மீண்டும் இங்கிலாந்து சென்றார். முனைவர் ஜி.டபிள்யூ.கென்னெர், நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் சர் அலெக்சாண்டர் டாட் என்பவர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார். 1950-52 ஆண்டிகளில் புரதங்கள், நியூக்ளிக் அமிலங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார்.
1952-ல் பிரித்தானிய கொலம்பியா ஆய்வகத்தில் முனைவர் கோர்டன் எம்.ஷ்ரம் என்பவரின் அழைப்பின் பேரில் ஆய்வாளராகப் பணியேற்றுக் கொண்டார். முனைவர் ஷ்ரம் அவர்கள் அளித்த உற்சாகத்தினாலும் முனைவர் ஜேக் கெம்பெல் அவர்களின் ஆலோசனையுடன் பாஸ்பேட் எஸ்டர்கள், நியூக்ளிக் அமிலங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். இவருடன் மேலும் பலரும் ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருந்த போதும் 'முனைவர் கோர்டன் எம். டெனெர்' என்பவர், குழுவின் ஆய்வு முன்னேற்றதிற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாய் விளங்கினார். ஆய்வுகள்அவர் 1959இல் மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாததான இணைநொதி-ஏ (coenzyme-A) என்ற வேதிப் பொருளை உற்பத்தி செய்தார். அடுத்த ஆண்டில் குரானா அமெரிக்கா சென்று விஸ்கான்சின் பல்கலைக்கழக நொதி ஆய்வு நிறுவனத்தில் தமது நோபல் பரிசு சக ஆய்வாளர் மார்சல் நோரென்பர்க் உடன் சேர்ந்து செயற்கை உயிர் உற்பத்தித் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அங்கு அவர்களின் ஆய்வின் பயனாக மரபுவழிப்பட்ட நோய்கள் சிலவற்றைக் குணமாக்க இயலும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்புக்காக 1968இல் உடற்கூறியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு குரானா, நோரென்பர்க், ஹாலி (Holley) ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் 1970இல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தில் உயிரியல் மற்றும் வேதியியல் பேராசிரியர் பதவி, குரானாவுக்கு அளிக்கப்பட்டது. அங்கு மரபுக் குறியம் (genetic code) பற்றி அவர் ஆற்றிய பணி உலகப் புகழ் பெற்றது. எஸ்கிரிஷியா கோலி ([Escherichia coli) என்னும் நுண்ணுயிரிகள் (bacteria) மனித மற்றும் விலங்கினங்களின் குடற் பகுதியில் இருப்பது. கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் ஏற்கனவே அதன் கட்டமைப்பைப் பற்றி ஆய்வு செய்துள்ளனர். குரானாவும் அவருடைய குழுவினரும் இந்நுண்ணுயிரியின் மரபணு உருவாக்கத்தில் ஈடுபட்டனர். படிப்படியாக முயன்று இந்நுண்ணுயிரியின் சுமார் 207 மரபணுக்களை அவர்கள் செயற்கையாக உருவாக்கினர். பின்னர் 1976 ஆகஸ்டில் இச்செயற்கை மரபணுவை எஸ்கிரிஷியா கோலி நுண்ணுயிரியில் செருக, அது இயற்கை மரபணு போன்றே பணியாற்றியது. இச்சாதனையை உலகமே வியந்து பாராட்டியது. தமது ஆய்வை வெற்றிகரமாக நிறைவேற்ற குரானாவுக்கும் அவருடைய குழுவிலிருந்த 24 உதவியாளர்களுக்கும் சுமார் ஒன்பது ஆண்டுகள் தேவைப்பட்டன. சிறப்புகள்நோபல் பரிசுடன் கூட கொரானா மேலும் பல பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளார்.
கொரானா நிகழ்வுவிஸ்கான்சின் மேடிசன் உயர் தொழில்நுட்பத்துறை, இந்திய-அமெரிக்க அறிவியல் தொழில் நுட்ப அமைப்பு ஆகியவை இணைந்து 2007-ல் கொரானா நிகழ்வு (Khorana Program) என்ற அமைப்பை உருவாக்கியது. இது கொரானாவின் பெயரில் தொடர்ந்து ஆய்வை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்திய மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல அறிவியல் அறிஞர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பங்கெடுத்து வருகின்றனர். பட்டதாரி, முதுகலை, மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோரின் ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்துதல், கிராமப்புற வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு முதலியவற்றில் முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது. 2009 -ல் கொரானாவை இந்நிகழ்வுக்கு வரவழைத்து அவரைப் பெருமைப்படுத்தினார்கள். மறைவுகொரானா 2011 நவம்பர் மாதம் 9 ஆம் நாள் மாசசூசெட்ஸ் கன்கார்ட் என்ற இடத்தில் தன்னுடைய 89 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். உசாத்துணைஅறிவியல் ஒளி, டிசம்பர் 2011 இதழ் வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia