கிளாந்தான் சுல்தான்
கிளாந்தான் சுல்தான் (ஆங்கிலம்: Sultan of Kelantan; மலாய்: Sultan Kelantan Darul Naim) என்பவர் கிளாந்தான் மாநிலத்தின் ஆளும் அரசராகவும், கிளாந்தான் மாநிலத்தின் தலைவராகவும், இசுலாமிய மதத்தின் தலைவராகவும் சேவை செய்யும் தலைமை அரச ஆளுநராகும். அந்த வகையில், கிளாந்தான் சுல்தான் என்பவர் கிளாந்தான் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆவார். தற்போதைய சுல்தான் ஐந்தாம் முகமது 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரியணை ஏறினார். இவர், கிளாந்தான் மாநிலத்தின் 29-ஆவது சுல்தான் ஆவார். இவர் 243-ஆவது மலேசிய ஆட்சியாளர்களின் பேரவையில்; மலேசியாவின் 15-ஆவது பேரரசராக தேர்வு செய்யப்பட்டார். 13 டிசம்பர் 2016 தொடங்கி 6 சனவரி 2019 வரையில் மலேசிய அரசர் பதவியை வகித்தார். இருப்பினும் தனிப்பட்ட காரணங்களினால் அவர் 6 சனவரி 2019-இல் மலேசிய அரசர் பதவியை விட்டு விலகினார்.[1][2][3] பொது14 அக்டேபர் 2016-இல் நடைபெற்ற மலேசிய ஆட்சியாளர்களின் பேரவையில், அடுத்த யாங் டி பெர்துவான் அகோங்-ஆக சுல்தான் ஐந்தாம் முகமது அறிவிக்கப்படடர். இவரின் ஆட்சிக்காலம் 13 டிசம்பர் 2016-இல் தொடங்கியது.[4][5] இருப்பினும், இவர் 6 சனவரி 2019-ஆம் தேதி பேரரசர் பதவியைத் துறந்தார். மலேசிய வரலாற்றில் பேரரரசர் ஒருவர் தம் பதவியைத் துறப்பது அதுவே முதல் முறையாகும்.[6] வரலாறுவரலாற்று ரீதியாக கிளாந்தான் மாநிலம், பண்டைய சீன, இந்திய மற்றும் சயாமிய நாகரிகங்களுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த மாநிலமாக இருந்தது. 13 மற்றும் 14-ஆம் நூற்றாண்டுகளில் மயாபாகித்து பேரரசு மற்றும் சிறீவிஜயம் பேரரசுகளின் துணை இராச்சியமாக இருந்த பின்னர், 15-ஆம் நூற்றாண்டில் சயாம் மற்றும் மலாக்கா அரசுகளின் அதிகாரத்தின் கீழ் வந்தது. 1511-இல் போர்த்துகீசியர் மலாக்காவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, கிளாந்தான் பல சிறு பிரதேசங்களாகப் பிரிந்தது. பின்னர் மீண்டும் சயாமிர்களால் கைப்பற்றப்பட்டு தாய்லாந்து பட்டாணி இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. பட்டாணி மாநிலம்1760-ஆம் ஆண்டில், கிளாந்தான் குபாங் லாபு (Kubang Labu) எனும் இடத்தில் வாழ்ந்த ராஜா லோங் முகம்மது (Long Muhammad) என்பவரால், கிளாந்தான் மாநிலம் ஒரே ஆட்சியாளரின் கீழ் கொண்டு வரப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பட்டாணி வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரபுத்துவ போர்த் தலைவரான லோங் யூனுஸ் (Long Yunus) என்பவரால் ராஜா லோங் முகம்மது தோற்கடிக்கப்பட்டார். அரியணையை கைப்பற்றிய லோங் யூனுஸ் தன்னை கிளாந்தானின் அரசராக அறிவித்துக் கொண்டார். 1795-இல் ராஜா லோங் யூனுஸ் இறந்ததைத் தொடர்ந்து, கிளாந்தான் மாநிலத்தின் கட்டுப்பாடு திராங்கானு மாநிலத்திடம் வழங்கப்பட்டது. 1800-ஆம் ஆண்டில், ராஜா லோங் யூனுசின் மகன் லோ முகம்மது என்பவர் தன்னை சுல்தான் முகம்மது I என அறிவித்துக் கொண்டார். 1812-இல், சுல்தான் முகம்மது I (Sultan Muhammad I), ஒரு துணை ஆட்சியாளராக [[[சயாம்|சயாமியர்களால்]] ஏற்றுக்கொள்ளப்பட்டார். அரண்மனைகள்![]() ![]()
வாரிசுகள்கிளாந்தான் சுல்தானகத்தின் வாரிசு அமைப்பானது, ஆண்வழி தலைமகன் மரபு உரிமை (Agnatic primogeniture) மூலம் தீர்மானிக்கப்படுகிறது. எந்தப் பெண்ணும் ஆட்சியாளராக முடியாது; மேலும் பெண் வழித்தோன்றல்கள், பொதுவாக வாரிசுகளில் இருந்து விலக்கப்படுகின்றன. கிளாந்தான் சுல்தான் ஒரு மலாய்க்காரராகவும், இரத்த வழியில் ஓர் அரசராகவும், கிளாந்தான் சுல்தானகத்தின் வழித்தோன்றலாகவும், மற்றும் ஒரு முசுலிமாகவும் இருக்க வேண்டும். மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia