சஞ்சயன் (மகாபாரதம்)

சஞ்சயன் (மகாபாரதம்)
சஞ்சயன்
குருச்சேத்திரப் போர் நிகழ்வுகளை ஞானக்கண்ணால் கண்டு மன்னர் திருதராட்டிரனுக்கு விளக்கும் சஞ்சயன்
Information
பால்ஆண்
தொழில்தேரோட்டி
மன்னரின் ஆலோசகர்
திருதராட்டிரன் சஞ்சயனை பாண்டவர்களிடம் தூது அனுப்புதல்

சஞ்சயன் (Sanjaya or Sanjay) (சமசுகிருதம்:सञ्जय) மகாபாரதம் காவியத்தில் மன்னர் திருதராட்டிரனின் தேரோட்டியும், ஆலோசகரும் ஆவார். இவர் சூதர் மரபினர் ஆவார்/[1] சஞ்சயனுக்கு வேதவியாசர் அருளிய தெய்வீகப் பார்வையைக் கொண்டு, பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் குருச்சேத்திரப் போர் நிகழ்வுகளை மன்னர் திருதராட்டிரனுக்கு உடனுக்குடன் உரைத்துக் கொண்டே இருப்பார்.[2] குருச்சேத்திரப் போர்க்களத்தில் தன் மகன்கள் இறந்த செய்திகளைக் கேட்டு மன்னர் திருதராஷ்டிரன் துயரம் அடைந்த போது, சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு ஆறுதல் கூறுவது வழக்கம்.

மன்னர் திருதராட்டிரன் கட்டளைப்படி குருச்சேத்திரப் போரை நிறுத்தக் கோரி சஞ்சயனை பாண்டவர்களிடம் தூது சென்றார்.[3][4]

போரில் வென்ற பாண்டவர்கள் முடிசூடிக் கொண்ட பின்னர், சில காலம் கழித்து திருதராட்டிரன், காந்தாரி, குந்தி, விதுரன் ஆகியோர் வனவாசம் செல்லும் போது, சஞ்சயனும் அவர்களுடன் வனத்திற்கு பயணித்தான்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. kingsaud 11 (2000). The Mahabharata: a shortened modern prose version of the Indian epic. University of Chicago Press.{{cite book}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. Celestial Vision obtained by Sanjaya!
  3. சஞ்சயன் தூதுச் சருக்கம்
  4. SECTION XXVII
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya