சுந்தர் சி (ஆங்கிலம்: Sundar C, பிறப்பு: 3 சனவரி 1966) தமிழ்த் திரைப்பட இயக்குநரும்நடிகருமாவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர், தமிழில் 24 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தலைநகரம் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.[1] ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த இவர் முறை மாமன் என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குநராக அறிமுகமானார். இவருடைய பல படங்களில் கதாநாயகியின் பெயர் இந்து என்பதாகும். உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இவருடைய இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. மேட்டுக்குடி, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு போன்றவை இவர் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படங்கள் ஆகும்.
2006-ம் ஆண்டு தன்னுடைய இயக்குநர் பணியை விடுத்து, தலை நகரம் திரைப்படம் மூலமாக நடிகரானார். ஆரம்பத்தில் சரியாக போகாவிட்டாலும், பின்னர் இத்திரைப்படம் மிகப் பெரும் வெற்றியடைந்தது. 2007-ம் ஆண்டு வெளிவந்த வீராப்பு திரைப்படமும் 2008-ம் ஆண்டு சக்தி சிதம்பரத்தின் நடிப்பில் வெளியான சண்டை திரைப்படமும் வெற்றி அடைந்தன. அயினும் அதனைத் தொடர்ந்து வெளியான திரைப்படங்களான ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ உள்ளிட்டவைகள் ஓரளவே ஓட ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, நகரம் உள்ளிட்டவை படுதோல்வியைத் தழுவின. தற்போது இவர் நடிக்கும் திரைப்படமான முரட்டுக் காளை ஏற்கனவே 1980-களில் வெளியான திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.[2]
சின்னத்திரை அறிமுகம்
2017-ம் ஆண்டில், தென்னிந்திய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் "நந்தினி" என்று தொடர் அவரின் மனைவி குஷ்பு அவர்களோடு இணைந்து தயாரித்தார்.[3]