சேத்தியாத்தோப்பு
சேத்தியாத்தோப்பு (Sethiyathope), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மாவட்டத் தலைமையிடம் கடலூரிலிருந்து 54 கி.மீ தொலைவில் உள்ளது. அமைவிடம்சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு கிழக்கே சிதம்பரம் 20கி.மீ; மேற்கே விருத்தாச்சலம் 24 கி.மீ; வடக்கே வடலூர் 16 கி.மீ; தெற்கே காட்டுமன்னார்கோயில் 16 கி.மீ தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு14 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, புவனகிரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,269 வீடுகளும், 8,824 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 88% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 962 பெண்கள் வீதம் உள்ளனர்.[5] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia