விருத்தாச்சலம்
விருத்தாச்சலம் (ஆங்கிலம்:Vriddhachalam அல்லது Virudhachalam), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் வட்டம் மற்றும் விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை நகராட்சி ஆகும். இது கடலூர் மாவட்ட அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகராட்சி ஆகும். போக்குவரத்து
தொடர்வண்டி போக்குவரத்து
அருகில் உள்ள விமான நிலையம்
பெயர்க்காரணம்"திருமுதுகுன்றம்" எனவும் "பழமலை" எனவும் வழங்கப்பட்டு வந்த ஊர், பின்னாளில் வடமொழி பெயராக விருத்தாசலம் என மாற்றப்பட்டது. "விருத்தம்"(=முதிர்ந்த) மற்றும் "அசலம்"(=மலை) எனும் இரு வடமொழி சொற்களின் கூட்டே "விருத்தாசலம்" ஆகும். விருத்தாச்சலம் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. விருத்தாச்சலம் நகரம் தொண்டை மண்டலத்தில் ஒரு பகுதியாக இருந்தது. மக்கள் வகைப்பாடுஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73,415 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். விருத்தாச்சலம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விருத்தாச்சலம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புவியியல்இந்நகரம் 11°30′N 79°20′E / 11.50°N 79.33°E[5] -ல் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 45 மீட்டர் உயரத்தில் உள்ளது. பள்ளிக்கூடங்கள்
பார்க்க வேண்டிய இடங்கள்![]()
மத சம்பந்தமான விழாக்கள்
அரசியல்விருத்தாசலம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். மக்களவைத் தொகுதிகளில் கடலூர் தொகுதியின் கீழ் வருகிறது. 2006ல் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் இங்கு வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தேமுதிக சார்பாக விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றார். தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம். ஆர். ஆர். ராதாகிருஷ்ணன் (இ.தே.கா) , இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். திரையரங்குகள்
இதையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia