திருத்தந்தையின் ஆட்சி பெயர்திருத்தந்தையின் ஆட்சி பெயர் என்பது திருத்தந்தையாக தேர்வு செய்யப்படும் நபர் தனக்கென தெரிவு செய்யும் ஒரு புதிய பெயரினைக்குறிக்கும். ஆறாம் நூற்றாண்டு முதல், சிலர் திருத்தந்தையாக பதவி ஏற்பதற்கு முன் தங்களின் பெயரை மாற்றிக்கொண்டனர். 10 ஆம் நூற்றாண்டில் இது ஒரு வழக்கமாகவே மாறியது, மேலும் 16ஆம் நூற்றாண்டு முதல் ஆட்சி செய்த எல்லா திருத்தந்தையரும் தங்களின் பெயர்களை மாற்றிக்கொண்டுள்ளனர். முதல் நூற்றாண்டுகளில், உரோமை ஆயர்கள் தங்கள் தேர்வுக்குப்பின் தங்களின் திருமுழுக்கு பெயரினையே பயன்படுத்தி வந்தனர். ஒரு புதிய பெயரை தேர்ந்தெடுக்கும் வழக்கமானது கி.பி. 533இல் திருத்தந்தையான இரண்டாம் யோவானிலிருந்து தொடங்கியது. இவர்தம் இயற்பெயர் "மெர்க்கூரியஸ்" என்னும் உரோமை புராணக்கடவுளான பெர்குரியின் பெயரான மெர்க்கூரியஸ் ஆகும். இதனால் இவர் அதைப் பயன்படுத்தாமல் யோவான் என்னும் பெயரை ஏற்றார். கடைசியாக தனது திருமுழுக்கு பெயரை மாற்றாதவர் 1555இல் திருத்தந்தையான இரண்டாம் மர்செல்லுஸ் ஆவார். அக்காலத்திலும் கூட இது மிகவும் அசாதாரணமான ஒன்றாக கருதப்பட்டது. திருத்தந்தையின் ஆட்சி பெயர் பட்டியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia