ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)
திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ் (இலத்தீன்: Bonifatius IX,; c. 1350 – 1 அக்டோபர் 1404), இயற்பெயர் பிரோ தோமசெல்லி, என்பவர் திருத்தந்தையாக 2 நவம்பர் 1389 முதல் 1404இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். மேற்கு சமயப்பிளவின் போது உரோமையிலிருந்து ஆட்சிசெய்தவர் இவர். இவருக்கு எதிராக பிரெஞ்சு அரசின் துணையோடு எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் மற்றும் எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் ஆகியோர் அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்தனர். திருத்தந்தை ஆறாம் அர்பனால் 1385இல் கர்தினால் குருவாக உயர்த்தப்பட்டார். ஆறாம் அர்பனுக்குப்பின்பு 1389இல் இவர் திருத்தந்தையானார். செருமனி, இங்கிலாந்து, அங்கேரி, போலந்து, மற்றும் இத்தாலியின் பெரும் பகுதி இவரை ஆதரித்தன. ஐரோப்பாவின் பிற பகுதிகள் எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்டை ஆதரித்தன. இவ்விருவரும் ஒருவர் மற்றவரை திருச்சபையினை விட்டு விலக்கியதாக அறிவித்தனர். ஒன்பதாம் போனிஃபாஸ் மேற்கு சமயப்பிளவினை அரசியல் பிரிவாகப்பார்ததால், அரசியல் தீர்வு காணவே முயன்றார். இதனால் இப்பிளவை முடிவுக்கு கொண்டுவராமல் இதனை பெரிதும் விரிவடையச்செய்தார்.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia