பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை)
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (2 மார்ச் 1810 – 20 ஜூலை 1903), இயற்பெயர் வின்சேன்ஸோ ஜொவாக்கீனோ ரஃபயேல் லூயிஜி பெச்சி என்பவர் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக 20 பெப்ரவரி 1878 முதல் 1903இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார்.[1] இவர் இத்தாலிய துறை குடும்பத்தைச்சேர்ந்தவர். 93ஆம் அகவை வரை திருத்தந்தையாக இருந்ததால், திருத்தந்தையர்களுள் மிக மூத்த அகவைவரை பணியாற்றியவர் இவர் ஆவார். ஒன்பதாம் பயஸ் மற்றும் இரண்டாம் அருள் சின்னப்பருக்கு அடுத்து மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவர் இவர் ஆவார். இவர் அறிவுசார் இறையியலுக்காகப் பெரிதும் அறியப்படுகின்றார். கத்தோலிக்க மரியாளியலில் இவரின் பங்கு குறிக்கத்தக்கது. இவர் செபமாலை மற்றும் உத்தரிய பக்தியினை வளர்க்க முனைந்தார். செபமாலையினைக்குறித்து 11 சுற்றுமடல்களை எழுதியதால் இவர் செபமாலையின் திருத்தந்தை எனறு அழைக்கப்படுகின்றார். 1870க்குப்பின்பு திருத்தந்தை நாடுகளின்மேல் தனது ஆட்சிக்காலம் முழுவதும் அதிகாரம் இல்லாமல் இருந்த முதல் திருத்தந்தை இவர் ஆவார். ஜூலை 20, 1903 அன்று தனது 93ஆம் அகவையில் இவர் காலமானார். முதலில் புனித பேதுரு பேராலயத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டாலும், பின்னாட்களில் இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயத்துக்கு இவரின் கல்லறை மாற்றப்பட்டது. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia