முதலாம் மரீனுஸ் (திருத்தந்தை)
முதலாம் மரீனுஸ் (அல்லது இரண்டாம் மார்டீன்), கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர் 16, 882 முதல் மே 15, 884 வரை இருந்தவர். இவர் டிசம்பர் 882-இல் எட்டாம் யோவானுக்குப் பின் திருத்தந்தையானவர்.. திருத்தந்தையாவதற்கு முன்இவர் திருத்தந்தையாவதற்கு முன் சேயிரி நகரின் ஆயராக இருந்தார். காண்ஸ்டான்டினோபிலின் மூப்பரான முதலாம் போதியோஸால் எழுந்த சர்ச்சைகளை தீர்க்க இவருக்கு முன் இருந்த மூன்று திருத்தந்தையர்கள் இவரை தம் தூதுவராக அனுப்பினர். திருத்தந்தையாகஇவர் திருத்தந்தையான பின் முதலில் ஃபொர்மோசுஸை போர்தஸ் நகரின் கர்தினால் ஆயராக நியமித்தார்.[1] இவருக்கு பெரிய ஆல்பர்டின் (r. 871-899) மீது இருந்த மரியாதையின் நிமித்தம், உரோமையில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் மக்களை வரிச்சுமையிலிருந்து விடுவித்தார்.[1] இவர் மே அல்லது ஜூன் 884-இல் இறந்திருக்கலாம். இவருக்கு பின் மூன்றாம் ஹேட்ரியன் திருத்தந்தையானார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia