பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)
![]() திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius XI; c. 1329 – 27 மார்ச் 1378) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 30 டிசம்பர் 1370 முதல் 1378இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார்.[1] இவர் அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்த ஏழாவதும் கடைசித் திருத்தந்தையும் ஆவார்.[2] இவரின் இயற்பெயர் பியேர் ரோஜர் தெ பியுஃபோர்ட் ஆகும். சுமார் 1330இல் பிரான்சுப்பேரரசின் மமுத் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் திருத்தந்தை ஆறாம் கிளமெண்டின் உடன் பிறந்தவரின் மகன்.[3] திருத்தந்தை ஐந்தாம் அர்பனுக்குப் பின்னர் 1370இல் நடந்த தேர்தலில் திருத்தந்தையாக தேர்வானார். திருத்தந்தையாகஜான் விக்லிஃபின் படிப்பினைகளை இவர் 1374இலும் 1377இலும் இருமுறை அதிகாரப்பூர்வமாக கண்டித்தார்.[4][5] 17 ஜனவரி 1377 அன்று இவர் உரோமைக்கு திருப்பீடத்தை மீண்டும் கொண்டுவந்தார். இது சியன்னா கத்ரீனின் கடுமைடான செற்களால் தூண்டப்பட்டது என்பர்.[6] இது இவருக்கு முன்பு திருத்தந்தையாக இருந்த ஐந்தாம் அர்பனால் முயலப்பட்டு பிராரன்சு அரசுடனான மோதலால் கைவிடப்பட்டது.[7] இறப்புஇவர் உரோமைக்கு வரும் வழியில் 27 மார்ச் 1378 அன்று இறந்தார்.[8] அடுத்தநாள் புனித மரிய நூவா கோவிலில் இவர் புதைக்கப்பட்டார்.[9] உரோமையர்கள், ஒரு உரோமையரையே திருத்தந்தையாக தேர்வுசெய்ய கிளர்ச்சி செய்தனர். இதனால் 1378இல் நாபொலியினரான பார்தலோமியோ பிரிக்னானோ திருத்தந்தை ஆறாம் அர்பன் என தேர்வு செய்யப்பட்டார். ஆயினும் தேர்வானப்புதியவர் பலவற்றை மாற்ற முயன்றதாலும், கடுங்கோபக்காரராக இருந்ததாலும், கர்தினால்கள் அங்கனி என்னும் இடத்தில் ஒன்று கூடி அதே ஆண்டு செப்டம்பர் 20 அன்று ஏழாம் கிளமெண்டை தேர்வு செய்தனர். இது "மேற்கு சமயப்பிளவுக்கு" காரணியாயிற்று.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia