ஏழாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)
திருத்தந்தை ஏழாம் இன்னசெண்ட் (இலத்தீன்: Innocentius VII; 1339[1] – 6 நவம்பர் 1406), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 17 அக்டோபர் 1404 முதல் 1406இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவரின் இயற்பெயர் கொசிமோ தெ மிகிலியோராதி ஆகும் மேற்கு சமயப்பிளவின்போது (1378–1417) இவர் திருத்தந்தையாக இருந்தார். இவருக்கு எதிராக எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட், அவிஞ்ஞோனில் ஆட்சி செய்தார். திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ் இவரை 1389இல் இவரை கர்தினால்-குருவாக உயர்த்தினார். ஒன்பதாம் போனிஃபாஸின் இறப்புக்குப்பின்பு உரோமையில் இருந்த எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்டினின் தூதுவர்களிடம் கர்தினால்கள் பெனடிக்டிக்ட் பதவி விலகினால் தாங்கள் திருத்தந்தை தேர்தலை தள்ளிப்போட விருப்பம் தெரிவித்தனர். இதை அவர்கள் ஏற்காததால் அவர்கள் ஏழாம் இன்னசெண்டை தேர்வு செய்தனர். இவர் உரோமையில் 6 நவம்பர் 1406 அன்று இறந்தார். இவருக்குப்பின்பு திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி திருத்தந்தையானார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia