மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை)
புதிய பாப்புவைத் தேர்ந்தெடுக்க, கர்தினால்களுக்கு பத்து வாரம் தேவைப்பட்டன. இங்கிலாந்து கர்தினாலான ரெஜினால்ட் போல் என்பவரை புதிய பாப்புவாக தேர்ந்தெடுக்க விரும்பினர். ஆனால் அவர் மிகுந்த தாழ்மையுடன், தம்மைப் பாப்புவாக தேர்தெடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். எனவே, இத்தாலிய கர்தினால் ஜான் மோன்டி என்பவரை புதிய பாப்புவாகத் தேர்தெடுத்தனர். 1550 பிப்ரவரி 22இல் பணியேற்றபோது, மூன்றாம் ஜீலியஸ் என்று பெயர் சூடிக்கொண்டார். அரசன் 8-ஆம் ஹென்றி இறந்தபின், அவரின் மகள் மேரி, இங்கிலாந்தின் அரசியானார். கேண்டர்பரியின் பேராயராக கர்தினால் போல் ஐ பாப்பு நியமித்தார். இவர்தான் கேண்ட்ர்பரியின் கடைசி பேராயர். இங்கிலாந்து திருச்சபையில் ஏற்பட்ட பிளவினால் புதிதாக உருவான 'புரொட்டஸ்டான்ட்' என்ற பிரிவினைச் சபையையும் கத்தோலிக்கத் திருசபையையும், இவரால் சமரசப்படுத்த முடியவில்லை. எதையும் சாதிக்க முடியாத நிலையில், ஐந்தாண்டுப் பணிப் பொறுப்பிற்குப்பின் 1555 மார்ச் 25ல் ஜீலியஸ் பாப்பு காலமானார் |
Portal di Ensiklopedia Dunia