மனேந்திரகர்
மனேந்திரகர் (Manendragarh) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 9 செப்டம்பர் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்ட மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தின்[1] நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரத்தைச் சுற்றிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் அதிகம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 43 மனேந்திரகர் நகரத்தின் வழியாகச் செல்கிறது. இந்நகரத்தின் வழியாக ஹஸ்தேவ் ஆறு பாய்கிறது. இந்நகரத்தை சுற்றியுள்ள மலைக்காட்டில் அமிர்த தாரை அருவி உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 21 வார்டுகளும், 7,008 வீடுகளும் கொண்ட மனேந்திரகர் நகரத்தின் மக்கள் தொகை 33,07 ஆகும். அதில் ஆண்கள் 17,119 மற்றும் 15,952 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 932 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 86.7% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,626 மற்றும் 3,078 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 76.61%, இசுலாமியர் 15.69%, பௌத்தர்கள், சீக்கியர்கள் 1.99%, கிறித்தவர்கள் 3.86% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர்.[2] பொருளாதாரம்இந்ந்நகரைச் சுற்றிலும் காடுகள், நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் சுண்ணாம்பு சுரங்கங்கள் உள்ளது. போக்குவரத்துசாலைப்போக்குவரத்துதேசிய நெடுஞ்சாலை எண் 43, மனேந்திரநகர் வழியாக ரேவா, ஜபல்பூர், பிலாஸ்பூர், இராய்ப்பூர், அலகாபாத், வாரணாசி போன்ற நகரங்களுடன் இணைக்கிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia