ஸ்ரீசூக்தம்

ஒடிசாவில் உள்ள பொ.ஊ.12–18-ம் நூற்றாண்டைய இலக்குமி சிலை

ஸ்ரீசூக்தம் அல்லது சிறீசூக்தம் (ஆங்கிலம்: Śrī Sūkta; சமக்கிருதம்: श्रीसूक्तम्; Śrīsūktam) என்பது இந்து தெய்வமான இலக்குமியைப் போற்றும் மிகப்பழமையான சமசுகிருத பக்தி பாடல்களாகும்.[1] தேவியை வழிபாடு செய்வதற்காக சமசுகிருத மொழி இலக்கணப்படி இப்பாடல் பாராயணம் செய்யப்படுகிறது. ரிக்வேதத்தின் பிற்சேர்க்கைகளாகக் கருதப்படும் ரிக்வேத கிலானிகளில் காணப்படும் இப்பாடல் பௌத்த காலத்திற்கு முந்தையவை ஆகும்.[2]

உரை

கடவுள் ஸ்ரீ பலமுறை பல பழைய வேத பாடல்களில் தோன்றியுள்ளார். இவர் மங்களகரமான அரச குணங்களின் உருவகமாக கருதப்படுகிறார். [3] இப்பாடல் ஸ்ரீ மற்றும் இலட்சுமிக்கு இடையிலான ஒற்றுமை குறிக்கும் முதல் உரையாக இருக்கலாம். அக்னியுடனும் தொடர்புடையது. [4] பிந்தைய இதிகாச காலத்திலிருந்து (கி.பி 400), ஸ்ரீ-இலட்சுமியை விஷ்ணுவின் மனைவியாகவோ அல்லது துணைவியாகவோ தொடர்புபடுத்துகிறனர். [5]

ஸ்ரீயை மகிமை வாய்ந்தவர், அலங்காரமானவர், அரசவைத் தெய்வம், தங்கம் போன்ற பளபளப்பானவர், நெருப்பு, சந்திரன், சூரியன் போன்ற பிரகாசமுள்ளவர் என்று விவரிக்கிறது. தங்கம், கால்நடைகள், குதிரைகள், உணவு வடிவில் புகழ், வள்ளன்மை மிகுதியை வழங்குபவள் என்று அழைக்கப்படுகிறாள்; தேவை, பசி, தாகம் வறுமையுடன் தொடர்புடைய அலட்சுமியை வெளியேற்றும்படி மன்றாடப்படுகிறாள்.[6]

ஒப்பித்தல்

இது பஞ்ச-சூக்தங்களில் ஒன்றாகும். திருக்கோயில்களில் திருமஞ்சனத்தின் போது ஓதப்படும்.

தரவுகள்

  1. "Sri Suktam: The Earliest Hymn to Goddess Lakshmi".
  2. Kinsley 1999, ப. 20
  3. Kinsley 1999
  4. Scheftelowitz 1906
  5. Kinsley 1999
  6. Kinsley 1999

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya