இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1924
இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கான நான்காவது தேர்தல் (election to the Legislative Council of Ceylon) 1924 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. பின்னணிஇலங்கையின் சட்டவாக்கப் பேரவை 1833 ஆம் ஆண்டில் கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிருந்த்தானிய ஆளுநர் உட்பட 16 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இவர்களில் இலங்கை நிறைவேற்றுப் பேரவையின் ஐவர், நான்கு அரசாங்க அதிகாரிகள், மேலும் ஆறு பேர் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள் (மூன்று ஐரோப்பியர், ஒரு சிங்களவர், ஒரு தமிழர், ஒரு பரங்கியர்) நியமிக்கப்பட்டனர். 1889 இல் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரிக்கப்பட்டது (மூன்று ஐரோப்பியர், ஒரு கீழைத்தேய சிங்களவர், ஒரு கண்டியச் சிங்களவர், ஒரு தமிழர், ஒரு சோனகர், ஒரு பரங்கியர்)[1]. 1910 ஆம் ஆண்டில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது. இவர்களில் 11 பேர் அதிகாரபூர்வ உறுப்பினர்களும் 10 அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களும் (இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பியர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பரங்கியர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கைக் கல்விமான், இரண்டு நியமனம் பெற்ற கீழைத்தேய சிங்களவர், இரண்டு நியமனம் பெற்ற தமிழர், ஒரு நியமனம் பெற்ற கண்டிச் சிங்களவர், ஒரு நியமனம் பெற்ற சோனகர்) ஆவர்[2] மூவாயிரத்துக்கும் குறைவான இலங்கையர்கள் நான்கு அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களுக்காக வாக்களிக்கத் தகுதி பெற்றனர்[2]. 1920 ஆம் ஆண்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 (14 பேர் அதிகாரபூர்வ உறுப்பினர்கள், 23 பேர் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள்) ஆகவும்[3], 1923 ஆம் ஆண்டில் 49 ஆகவும் (12 + 37)[3][4] அதிகரிக்கப்பட்டது. ஆகத்து 1924 இல் சட்டவாக்கப் பேரவை கலைக்கப்பட்டு தேர்தல்கள் இடம்பெற்றன[4]. 34 உறுப்பினர்களுக்காக 205,000 இலங்கையர்கள் (4%) வாக்களிக்கத் தகுதி பெற்றனர்[4]. புதிய சட்டவாக்கப் பேரவை 1924 அக்டோபர் 15 இல் கூடியது[4]. தேர்தெடுக்கப்பட்ட அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள்தொகுதி வாரியாக தேர்தெடுக்கப்பட்ட சில உறுப்பினர்கள்:
(இது முழுமையான பட்டியல் அல்ல) நியமிக்கப்பட்ட அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள்ஆளுநரால் நியமனம் பெற்ற உறுப்பினர்கள்:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia