இந்திய அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்கள்140 கோடி மக்கள் தொகையுடன் உலகில் முதலாமிடத்தில் இருக்கும் இந்தியாவில், மே 2021 நிலவரப்படி, சுமார் 84 மில்லியன் மக்கள் பொருளாதாரத்தில் வறுமைக் கோட்டில் உள்ளனர். இது இந்திய மக்கள் தொகையில் 4.5% ஆகும். இந்திய அரசு கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.[1][2] இந்தியாவில் வறுமை ஒழிப்பு திட்டங்கள்வறுமை ஒழிப்புத் திட்டங்கள் என்பது இந்தியாவில் வறுமையை சமாளிக்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டங்களின் தொகுப்பாகும். இத்திட்டங்களின் நோக்கம் மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதே. கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகள் இல்லாததால், கிராமப்புறங்களில் வறுமையின் அளவு, நகரங்களை விட அதிகமாக உள்ளது. இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பின்வருமாறு: 1. ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் (IRDP)ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP)[3] என்பது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஊரகப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குவதே நோக்கமாகக் கொண்டது. வறுமை ஒழிப்பதற்கு கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் திறன்களை வளர்ப்பதற்கும் உதவும் ஒரு திட்டமாகும். இந்த திட்டம் 1980ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. கிராமப்புற கைவினைஞர்கள், குறு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு, 33.5% மானியத்துடன் அரச்ய் வங்கிகள் கடன் வழங்குகிறது. இதனால் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படுகிறது. 2. ஜவஹர் கிராம் சம்ரிதி யோஜனாஜவஹர் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் சீர்திருத்தப்பட்ட திட்டமே ஜவஹர் கிராம் சம்ரிதி யோஜனா திட்டம்[4] ஆகும். தற்போது இத்திட்டம் சம்பூர்ணா கிராமீன் ரோஜ்கர் யோஜனா[5] என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் கீழ். மத்திய-மாநில அரசுகள் 75:25 நிதி பங்களிப்பு செய்யும் வகையில் சிறு தொழில் செய்யக் கடன் வழங்கப்படுகிறது. 3. பிரதான் மந்திரி கிராமீன் அவாஸ் யோஜனாவறுமை ஒழிப்புத் திட்டங்களின் கீழ் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு இலவச வீடுகளை வழங்குவதே முக்கிய நோக்கமாகும்[6]. 4. தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP)இந்தத் திட்டம் 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள பிரிவைச் சேர்ந்த விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் போன்றவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதாகும். இந்த திட்டத்தின் கீழ் மூன்று திட்டங்கள் உள்ளன:
5. அன்னபூர்ணா திட்டம்இந்தத் திட்டம் 1999-2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் எப்போதும் தாங்களாகவே அதைச் செய்ய முடியாத மூத்த குடிமக்களுக்கு ஊட்டச்சத்து உணவை வழங்குவதாகும்,. வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், மேற்கண்ட வகையைச் சேர்ந்த வயதான குடிமக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச ஊட்டச்சத்து உணவை வழங்கப்படுகிறது. 6 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்இந்திய அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். இச்சட்டம் 25.05.2005 முதல் அமலாக்கப்பட்டது. முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு ஆண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிற்து. இதன் மூலம் நீர் நிலைகளை தூர்த்தல், வாய்க்கால்களை சீரமைத்தல் போன்ற வேளாண் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுகின்றனர். மேலும் நாள் ஒன்று ஒரு குறிப்பிட்ட தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது. வறுமை ஒழிப்பிற்கான பிற திட்டங்கள் வருமாறு:. 7 அன்னபூர்ணா யோஜனா திட்டம்சுய தொழில் செய்ய விழையும் பெண்களுக்கு உணவு விடுதிகள் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் வசதி மூலமாக நாட்டில் பெண் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே அன்னபூர்ணா திட்டத்தின் முக்கியமான நோக்கமாகவே உள்ளது.[7] இந்த நலத்திட்டத்தின் அளவானது, உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமாக அமைகிறது. இத்திட்டம் மைய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின்[9] கீழ் செயல்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 1 மே 2016 அன்று வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு 50 மில்லியன் எல்பிஜி எரிவாயு உருளை இணைப்புகளை விநியோகிக்க தொடங்கப்பட்டது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கானது. இந்தியப் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கான பழங்குடி மாணவர்கள் உண்டு உறைவிடப் பள்ளித் திட்டம் ஆகும் 14 சௌபாக்யா திட்டம் (Saubhagya scheme) அல்லது பிரதான் மந்திரி சஹாஜ் பிஜிலி ஹர் கர் யோஜனாகிராமப்புற வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான இந்திய அரசின் திட்டமாகும்.[10][11] கிராமப்புறப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்திய அரசின் திட்டமாகும். பெண்கள் மற்றும் பட்டியல் சமூகத் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்காக 5 ஏப்ரல் 2016 அன்று இந்திய அரசால் தொடங்கப்பட்டது. வறுமையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது COVID-19 இன் தாக்கத்தை சமாளிக்க ஏழை நலன் சார்ந்த வேலைவாய்ப்பு பிரச்சாரம் (கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் (GKRA)) என்ற ஒர் முன்முயற்சியை இந்திய அரசு தொடங்கியது.[1] இது ஒரு கிராமப்புற பொதுப்பணித் திட்டமாகும், இது 20 ஜூன் 2020 அன்று 50,000 கோடி ரூபாய் ஆரம்ப நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது (இது 2023 ஆம் ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சமம்). அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு, ₹6,000 நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. பொருளாதார வசதியில் கீழடுக்கில் இருக்கும் 40% மக்களுக்கு, பலவீனமானவர்களுக்கு அளிப்பதாகும். இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய, அரசால் முழுவதுமாக மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டம் ஆகும். 1 மே 2016 அன்று வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகளை விநியோகிக்க தொடங்கப்பட்டது. ₹80 பில்லியன் (ஐஅ$930 மில்லியன்) பட்ஜெட் ஒதுக்கீடு இந்த திட்டத்திற்காக செய்யப்பட்டது. கரும்பு மற்றும் வாழை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5 சதவிகிதமும், காரிஃப் பருவத்தில் பயிரிடப்படும் உணவுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு 2 சதவிகிதம், ராபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு 1.5 சதவிகிதம் என காப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி முத்ரா திட்டம் (PMMY) என்பது இந்திய அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாகும், இது "நிதியற்றவர்களுக்கு நிதியளிப்பது" என்ற நோக்கத்துடன் சிறு, குறு போன்ற நிறுவனங்களை முறையான நிதி அமைப்புக்கு கொண்டு வந்து அவர்களுக்கு மலிவு கடன்களை வழங்குவதாகும். விவசாயம் அல்லாத வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு பொதுத்துறை வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், மைக்ரோ நிதி நிறுவனங்கள் (MFI) மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) போன்ற அனைத்து நிதிநிறுவனங்களிடமிருந்தும் பத்து இலட்சம் ரூபாய் வரை கடன் பெற இது ஒரு சிறிய கடனாளியை அனுமதிக்கிறது. இத்திட்டம் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 அன்று இந்தியப் பிரதமரால் தொடங்கப்பட்டது. இலவச முதியோர் மருத்துவமனை இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia