பிரதான் மந்திரி மாத்ரி வந்தனா யோஜனா
பிரதான் மந்திரி மாத்ரி வந்தனா யோஜனா (PMMVY - தலைமையமைச்சரின் அன்னை பாதுகாப்பு திட்டம்), இந்திய ஒன்றிய அரசால் நடத்தப்படும் மகப்பேறு நன்மை திட்டமாகும். இத்திட்டம் முன்பு இந்திரா காந்தி மாத்ரித்வா சஹ்யோக் யோஜனா என அறியப்பட்டது. இத்திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கருவுற்ற மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு முதல் குழந்தை பிறப்பின்போது, சில விதிகளுக்குட்பட்டு பணப் பரிமாற்றம் செய்யும் திட்டமாகும்.[1][2] இது மகப்பேறு, குழந்தை வளர்ப்பின்போது பெண்களுக்கு ஏற்படும் ஊதிய இழப்புக்கான ஒரு பகுதி ஊதிய இழப்பீட்டை வழங்குவதுடன் பாதுகாப்பான குழந்தை பிறப்பு, நல்ல ஊட்டச்சத்துடன் கூடிய உணவு நடைமுறைகளுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறது. 2013 ஆம் ஆண்டில், இந்தத் திட்டம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 இன் கீழ் கொண்டு வரப்பட்டது. இது சட்டத்தில் கூறப்பட்டுள்ள ₹6,000 (ஐஅ$70) பேறுகாலப் பணப்பலனை வழங்குவதைச் செயல்படுத்துகிறது. தகுதியுடைய பயனாளிகள் மருத்துவமனைகளில் பிள்ளை பெற்றுக்கொள்வதற்காக ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY) திட்டததின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகையைப் பெறுவார்கள். JSY இன் கீழ் பெறப்பட்ட ஊக்கத்தொகை மகப்பேறு நலன்களுக்காக கணக்கிடப்படும். இதனால் சராசரியாக ஒரு பெண்ணுக்கு ₹6,000 (ஐஅ$70) கிடைக்கும்.[3]
வரலாறுஇந்த திட்டத்தின் பெயர் இரண்டு முறை மாற்றங்களுக்கு உட்பட்டது. 2014 இல், திட்டத்தின் பெயரிலிருந்து "இந்திரா காந்தி"யானது நீக்கப்பட்டது. 2017 இல், "பிரதான் மந்திரி" சேர்க்கப்பட்டது, தற்போது பிரதான் மந்திரி மாத்ரி வந்தனா யோஜனா (PMMVY) ஆனது.[6] காலக்கோடு
நோக்கங்கள்
IGMSY மாநில அரசுகளுக்கு மானியமாக நிதி உதவி வழங்குகிறது.[7] தகுதி நிபந்தனைகள் மற்றும் நிபந்தனைகள்முதலில், இந்தத் திட்டம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் கீழ் கொண்டு வரப்பட்டது, இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ₹6,000 (US$84) ரொக்கப் பேறுகாலப் பலன்களை வழங்குவதற்காகச் செயல்படுத்தப்பட்டது.[2] பின்னர், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு பெறுபவர்கள் தவிர, 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் நிபந்தனையுடன் கூடிய ₹5,000 (ஐஅ$58) ரொக்கப் பரிமாற்றப் பலன்களை மூன்று தவணைகளில் பெறத் தகுதியுடையவர்கள்.[8] தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்தத் தொகையானது ₹6,000 (ஐஅ$70) எனத் திருத்தப்பட்டு, தலா ₹3,000 (ஐஅ$35) என இரண்டு தவணைகளில் செலுத்தப்படும். சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia