கந்தசங்கடவு படகுப் போட்டி
கந்தசங்கடவு படகுப் போட்டி (மலையாளம்: കണ്ടശ്ശാംകടവ് ജലോത്സവം) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தின் கந்தசங்கடவில் உள்ள எனமக்கல் ஏரி மற்றும் கொனோலி கால்வாயில் நடைபெறும் வள்ளங்களி ஆகும். ஓணம் பண்டிகையின் திருவோணம் நாளில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது, அதைத் தொடர்ந்து 10 நாள் திருவிழா நடைபெறுகிறது. இந்த கோப்பை முதலமைச்சரின் சுழற் கோப்பை என்று அழைக்கப்படுகிறது. இந்த போட்டியானது இருட்டுகுத்தி மற்றும் சுருலன் படகு பிரிவுகளுக்கு நடத்தப்படுகின்றன. [1] [2] [3] [4] வரலாறு1955 ஆம் ஆண்டில் கேரள மாநிலம் உருவானபோது இந்தப் படகுப் போட்டி தொடங்கப்பட்டது. நிதிப் பிரச்சினைகள் காரணமாக படகுப் போட்டியானது போட்டி அமைப்பாளர்களால் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டது. 2011 இல், கேரள அரசு, திருச்சூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழு மற்றும் மணலூர் கிராம பஞ்சாயத்து ஆகியவற்றின் ஆதரவுடன் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. [5] [6] வெற்றியாளர்கள்
கேரளத்தில் பிற படகுப் போட்டிகள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia