தாத்தமங்கலம் குதிரை வேலாதாத்தமங்கலம் குதிரை வேலா அல்லது அங்கடி வேலா (Tattamangalam Kuthira Vela அல்லது Angadi Vela) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தாத்தமங்கலம் என்ற சிற்றூரில் நடத்தப்படும் ஒரு திருவிழா. மலையாள மொழியில் குதிரா என்றால் " குதிரை " என்றும் வேலா என்றால் "திருவிழா" என்றும் பொருள். திருவிழாவின் போது, உள்ளூர் மக்களால் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. குதிரை செலுத்துபவர்கள் அண்டை மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இங்கு கரியால் கருப்பு நிறத்தை உடலில் பூசிக்கொண்ட பல தன்னார்வலர்களைக் காணலாம்; இந்த ஆடவர் பந்தயத்தைக் காண்பதற்காக சாலையோரம் நிற்கும் மக்களைக் கட்டுப்படுத்தும் காவலர்கள் ஆவர். இது கரி வேலா என்றும் அழைக்கப்படுகிறது. ![]() குதிரை வேலாவின்போது, மாநில நெடுஞ்சாலை 27 இன் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் கே.எஸ்.இ.பி. அலுவலகத்திலிருந்து வேட்டக்கருப்பன் சுவாமி கோயில் வரை கூடுகிறார்கள். மேலும் காண்ககுறிப்புகள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia