கொடைக்கானல் சாலை தொடருந்து நிலையம்
கொடைக்கானல் ரோடு தொடருந்து நிலையம் (Kodaikanal Road railway station, நிலையக் குறியீடு:KQN) அல்லது கொடைரோடு தொடருந்து நிலையம் ஆனது, தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மைநாயக்கனூர் அருகே, மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த கொடை ரோட்டில் உள்ள தொடருந்து நிலையமாகும்.[1] இத்தொடருந்து நிலையம் பாகையில் அமைந்துள்ளது. கன்னியாகுமரியிலிருந்து, மதுரை வழியாக, சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா புதுதில்லி செல்லும் அனைத்து விரைவு மற்றும் பயணியர் தொடருந்துகளும் கொடைரோடு தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது. அமைவிடம்மதுரைக்கு வடக்கே 42 கி.மீ. தொலைவிலும்; திண்டுக்கல்லுக்கு தெற்கே 28 கி.மீ. தொலைவிலும், கொடைக்கானலுக்கு கிழக்கே 80 கி.மீ. தொலைவிலும் கொடை ரோடு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. வரலாறுசென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற பிற நகரங்களிலிருந்து மலைவாழிடமான, கொடைக்கானலில் தங்கி ஓய்வு எடுக்க, தொடருந்துகளில் குடும்பத்துடன் வரும் ஆங்கிலேயர்களின் வசதிக்காக, 1875-இல் அம்மைநாயக்கனூர் அருகே 1.5 கி.மீ. தொலைவில் தொடருந்து நிலையம் நிறுவப்பட்டது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia