பண்ணைக்காடு
பண்ணைக்காடு (ஆங்கிலம்:Pannaikadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அமைவிடம்மேற்கு தொடர்ச்சி மலையின், பழனி மலையின் கீழ்ப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் கொடைக்கானலிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8,731 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 32 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது.[3] பண்ணைக்காடு பேரூராட்சி பழனி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,493 வீடுகளும், 8,731 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.2% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,018 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,063 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,182 மற்றும் 607 ஆகவுள்ளனர்.[4] முக்கிய பயிர்கள்இந்த மலைக் கிராமத்தில் காபி, வாழை, பலா, மிளகு, ஆகிய பணப்பயிர்கள் அதிக அளவிலும், பூண்டு, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு பழங்கள் அதிகமாக விளைகின்றன. ஆதாரங்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia