கோலாலம்பூர் மாநாட்டு மையம்
கோலாலம்பூர் மாநாட்டு மையம் அல்லது கேஎல்சிசி மாநாட்டு மையம் (மலாய்; Pusat Konvensyen Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Convention Centre; KL Convention Centre) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையத்தில் (KLCC) உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையம் ஆகும். கேஎல்சிசி ஓல்டிங்ஸ் நிறுவனம் (KLCC Holdings); மற்றும் ஏஎஸ்எம் குளோபல் (ASM Global) ஆகிய நிறுவனங்களின் கூட்டு அமைப்பான கோன்வெக்ஸ் மலேசியா நிறுவனத்தின் (Convex Malaysia Sdn Bhd) மூலமாக இந்த மாநாட்டு மையம் நிர்வாகிக்கப்படுகிறது. பொது![]() இந்த மாநாட்டு மையம், 2015-ஆம் ஆண்டிற்கான மாநாட்டு மையங்களின் பன்னாட்டுக் கழகத்தின் (International Association of Convention Centres) (AIPC) புத்தாக்க விருதைப் பெற்றுள்ளது.[1] அத்துடன், கோவிட்-19 தொற்றுநோய் பேரிடரின் போது, இந்த மையம் பொதுமக்களுக்கான ஒரு தடுப்பூசி மையமாகவும் பயன்படுத்தப்பட்டது.[2] நவீன கட்டிடக்கலை; மற்றும் பின்நவீனத்துவ கட்டிடக்கலை கூறுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடம்; கோலாலம்பூர் நகர மையத்தின் முதனமையான மையத்திலும் அமைந்துள்ளது. சூன் 2005-இல் திறக்கப்பட்ட பின்னர், 31 மார்ச் 2017 வரை, இந்த மையம் 12,276 நிகழ்வுகளை நடத்தியுள்ளது. 20.9 மில்லியனுக்கும் அதிகமான பிரதிநிதிகள்; மற்றும் பார்வையாளர்களைக் கோலாலம்பூருக்கு கொண்டு வந்துள்ளது. அந்தப் பிரதிநிதிகள்; மற்றும் பார்வையாளர்களில் 7 விழுக்காட்டினர், பன்னாட்டு - ஆசியப் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அமைவுஐந்து அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த மாநாட்டுக் கண்காட்சி மையத்தில் பல்வேறு சிறிய பெரிய கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்துவதற்கான போதிய அளவிலான தளவாடங்களும் உள்ளன. மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் 6 பெரிய அளவிலான கண்காட்சி அரங்குகள் உள்ளன. அவை 9,710மீ² பரப்பளவைக் கொண்டவை; மேலும் அவை சிறிய பெரிய கண்காட்சிகளை நடத்துவதற்கு வாடகைக்கு விடப்படுகின்றன.[3] முதன்மை அரங்கம்ஆறாவது கண்காட்சி அரங்கம், மாநாட்டு மையத்திற்கு வெளியில் அமைந்துள்ளது. இந்த அரங்கம் 2,600 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது; மற்றும் முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[4] முதன்மை நுழைவாயிலுக்கு மேலே அமைந்துள்ள அந்த முதன்மை அரங்கம், பெரிய அளவிலான மாநாடுகள், கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், கண்காட்சிகள்; மற்றும் பெரிய அளவிலான நிறுவனக் கூட்டங்கள் நடத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. கருத்தரங்கு அரங்கம்முதனமை அரங்கம் 3 மாடிகள் உயரம் கொண்டது; மற்றும் 3,000 பேர் அமரக்கூடிய வசதியைப் பெற்றுள்ளது. எனினும், கருத்தரங்கு அரங்கம் ஒரே மாடியில் மூன்று அடுக்குகள் கொண்டது; இந்த அரங்கில் 470 பேர் அமரலாம்; மற்றும் சிறிய கச்சேரிகள், நடுத்தர அளவிலான விரிவுரைக் கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தலாம். பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான மூன்று பெரிய மாநாட்டு அறைகளும் (மாநாட்டு அரங்குகள்) உள்ளன; மொத்தம் 1,800 பேர் அமரலாம்; மேலும் 20 இருக்கைகள் கொண்ட சில சிறிய மாநாட்டு அறைகளும் உள்ளன. காட்சியகம்மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia