மெக்சிஸ் கோபுரம்
மெக்சிஸ் கோபுரம் அல்லது அம்பாங் கோபுரம் (மலாய்; Menara Maxis; ஆங்கிலம்: Maxis Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தில் 212 மீ (696 அடி அடி) உயரத்தில் உள்ள 49-அடுக்கு உயர வானளாவிய கட்டிடமாகும்.[2] இந்தக் கோபுரம் மெக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் (Maxis Communications); மற்றும் தஞ்சோங் குழும நிறுவனங்கள் (Tanjong Plc Group of Companies) ஆகியவற்றின் தலைமையகமாகச் செயல்படுகிறது.[3] பொதுகோலாலம்பூர் மாநகர மையத் திட்டத்தின் 1-ஆம் கட்டத்தின் கீழ் கேஎல்சிசி புராப்பர்டீஸ் ஓல்டிங்ஸ் பெர்காட் (KLCC Properties) நிறுவனத்தின் மூலம் மெக்சிஸ் கோபுரம் உருவாக்கப்பட்டது.[4] இந்தக் கட்டிடம் இம்பியான் கிலாசிக் (Impian Klasik Sdn Bhd) எனும் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதில் தஞ்சோங் குழும நிறுவனங்கள் 67% பங்குகளையும் கேஎல்சிசி புராப்பர்டீஸ் ஓல்டிங்ஸ் பெர்காட் 33% பங்குகளையும் வைத்துள்ளன. அமைவுமெக்சிஸ் கோபுரம் கோலாலம்பூர் மாநகர மையத்தின் வடமேற்கு பகுதியில் பெட்ரோனாஸ் கோபுரங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. மெக்சிஸ் கோபுரம், அலுமினியம் மற்றும் கண்ணாடி உறை முகப்பைக் கொண்டுள்ளது. மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia